Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பாடல் 10


மடையில் வாளைபாய - பாடல் 10


பெற்ற மாசு பிறக்கும் சமணரும்

உற்ற துவர் தோய் உருவிலாரும்

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றி பரவப் பறையும் பாவமே

விளக்கம்:

பெற்ற மாசு=நீராடுதளைத் தவிர்ப்பதால், சுற்றுப்புறத்திலிருந்து உடலுக்கு ஏறிய அழுக்குகள்; பிறக்கும்=தோன்றும்;

பொழிப்புரை:

நீராடுவதைத் தவிர்ப்பதால் தங்களது உடலினில் சேரும் அழுக்குகளுடன் தோன்றும் சமணர்களும், துவராடையினால் தங்களது உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குறைகள் உடைய சமய நெறிகளை மேற்கொண்டு உள்ளதால், அவர்கள் கோலக்காவில் உறையும் இறைவனை, தங்களது தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர்களை பார்த்து தவறான வழியில் செல்லாமல்; நீங்கள் கோலக்கா இறைவனைப் பற்றிக்கொண்டு போற்றி வழிபட, உங்களது பாவங்கள் தீர்ந்துவிடும்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - பாடல் 10


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: