Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - பாடல் 11


நறவ நிறை வண்டு - பாடல் 11


பொன்னார் மாடம் நீடும் செல்வப் புறவம் பதியாக

மின்னார் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனைத்

தன்னார்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை

பன்னாள் பாடி ஆடப் பிரியார் பாலோகம் தானே

விளக்கம்:

பொன்னார் மாடம்=பொன் போன்று அழகும் செல்வச் செழிப்பும் உடைய மாளிகைகள்; விரகன்=வல்லவன்

பொழிப்புரை:

பொன் போன்று அழகியதும் செல்வச் செழிப்பும் உடையதும் நெடிது உயர்ந்ததும் ஆகிய மாளிகைகள் நிறைந்த செல்வ வளம் கொழிக்கும் புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டுள்ள பெருமான், மின்னல் போன்று மெலிந்த இடையினை உடைய உமையன்னையுடன் இணைந்து உறைகின்றான். இயற்கையாகவே மலங்கள் நீங்கிய இறைவனை, அவன் பால் அன்பு வைத்துள்ளவனும், தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய அடியேன் உரைத்த இந்த தமிழ் மாலையினை பல நாட்கள் பாடி ஆடும் அடியார்கள் மறுமையில் மேலுலகத்தை அடைந்து பிரியாது வாழ்வார்கள்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - பாடல் 11


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: