இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அகிலத்திரட்டு அம்மானை 3

அகிலத்திரட்டு அம்மானை (Akilathirattu Ammanai) is the primary scripture of the அய்யா வழி (Ayyavazhi) religion, which originated in South India. It is considered a divine work that narrates the history of the world, the past, present, and future, focusing especially on the incarnation of அய்யா வைகுண்டர் (Ayya Vaikundar), the principal figure of Ayyavazhi. The scripture was written by ஹரி கந்தம்பரண் (Hari Gopalan Seedar) as per the revelations given by அய்யா வைகுண்டர்.


அகிலத்திரட்டு அம்மானை

பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்
மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்
சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர்
ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய்
பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து
மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில்
மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து
ஏரி வழிந்து இராச்சியத்தைத் தானெடுக்க
வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை
உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனேதா னாளோடி
மனுநீதிக் காவலவா வைகையடை யாதிருந்தால்
இனித்தேசந் தன்னை யாம்தேட ஞாயமில்லை
ஊரை யரித்து உவரிதனில் கொண்டேகும்
பாரை மிகஆளும் பத்தியுள்ள சோழமன்னா
என்றுகுடி யானவர்கள் இராசனுக் கேவுரைக்க
அன்றுதான் வைகை அணையடக்க வேணுமென்று
எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து
வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து
மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும்
எண்ணெண்ணக் கூடாத ஏதுவகை யானதெல்லாம் 20

கொண்டுவந் தேயணையில் கூறிட்டுத் தானடைக்க
அன்றுஅடை படாமல் அறிவழிந்து சோழமன்னன்
அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று
மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே

சோழன் வினை

கோளனென்ற மாநீசக் குலத்தி லுதித்துவந்த
ஈழனொரு பொல்லாதான் என்சொல்வா னம்மானை
மன்னவனே இந்தவைகை மலையெடுத்து வைத்தாலும்
இன்னமிது கேளாது ஏலாது நம்மாலே
தெய்வகுலச் சான்றோராய்ச் சித்திர மாகாளி
கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார்
அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டுவந்து
இந்த அணையடைக்க ஏலுமென்றா னம்மானை
அப்போது சோழன் அந்நீசக் கலியதினால்
இப்போது மயங்கி என்சொல்வான் மன்னவனும்
மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா
தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி
வாருமென்று சொல்லி மன்னவ னேவிடவே
சேருமென்று சொல்லச் செவுகர் தாம்விரைந்து
அழைத்துவந்தார் சான்றோரை அரசன்மிகக் கொண்டாடித்
தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ 40

வைகை தனையடைக்க வழிபாரு மென்றுரைத்தான்
செய்கை முடிச்சான்றோர் தேசமன்ன னோடுரைப்பார்
நல்லதல்ல மன்னவனே நம்மோ டிதுவுரைக்க
இல்லை யிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே
வெட்டாப் படையை வெற்றிகொண்டோ மும்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன்
மாயக் கலியதனால் மன்னவனுங் கேளாமல்
ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே
குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்கக்
கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே
என்றுரைக்கச் சான்றோர் இயம்புவா ரம்மானை
நன்றுநன்று மன்னவரே நமக்கு அழகல்லவே
இவ்வேலை யொன்றும் எங்களோ டீயாமல்
எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள் ளதென்றார்
கேட்டந்த மன்னன் கிறுக்க முடனிறுக்கித்
திட்டினான் சான்றோரைச் சினத்தான்கா ணம்மானை
அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார்
இப்போது சோழன் ஏதுசொல்வா னம்மானை
நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு
தான்பாரு மென்று தன்தள கர்த்தருடன் 60

வேலையது கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான்
தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள்
சூழ வளைந்து துய்யசான் றோர்களையும்
வேழம் பலதை விட்டுப் பிடித்திடவே
சான்றோ ரடுக்கல் சாரவகை யில்லாமல்
மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே
அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து
இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனனாம்
சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே
நன்றியுடன் நின்றார் நாடி யவன்பிடித்துக்
குட்டையெ டென்றிடவே கூடா தெனவுரைக்கத்
தட்டினான் வைகையிலே தலையைச் சாணான்றனக்கு
ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழமன்னன்
சேனைத் தலைவர் சிறந்தசான் றோர்கள்தம்மில்
கொன்றா னொருவனையும் குளக்கரையி லம்மானை
பின்னா லொருவனையும் பிடித்துக்கொடு வாருமென்றான்
குட்டை யெடென்று கூறினான் மாபாவி
திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
இன்னமிந்தக் குட்டை யாங்கள்தொடோ மென்றனராம் 80

பின்னுமந்தச் சோழன் பிடித்தொரு வன்தனையும்
கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி
நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன்
கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை
அப்போது வித்யா தரமுனிவர் தானறிந்து
செப்போடு வொத்த திருமா லருகேகி
மாயவரே உம்முடைய மதலையேழு பேரில்
காய மழித்தான் கரிகாலச் சோழனவன்
என்ற பொழுது எம்பெருமா ளப்போது
அன்றுபுட் டேயருந்தி அவளாட்போல் கோலமது
கொன்று குமாரர்களைக் குசல்செய்த தும்பார்த்து
அன்றுவை கையடைத்து அடிகள்மிகப் பட்டவரும்
ஸ்ரீரங் கந்தன்னில் சிறந்தகோ பத்தோடே
சாரங்கர் வந்து தானிருந்தா ரம்மானை
மாகாளி தானறிந்து மக்களைத்தான் கொன்றதினால்
ஓகாளி சோழன் ஊர்வறுமை யாகிடவும்
பன்னிரண் டாண்டு பாரில்மழை பெய்யாமல்
உன்னினாள் மனதில் உடனே மழைசுவறிப்
பெய்யாமல் சோழன் பேருலகம் பஞ்சமதால்
அய்யமது ஈயாமல் அறிவழிந்து வாடினனே 100

இறந்தசான் றோர்களுட ஏந்திழைமா ரெல்லோரும்
சிறந்த தவம்புரிய சென்றனர்கா ணம்மானை
சென்ற தவத்தின் செய்திகே ளன்போரே
அழுக்குக் கலையணிந்து அணிந்தபொன் தாளாமல்
இழுக்குச் சொல்லீந்த ஈழன் பழிகொள்ளவும்
இறந்த மன்னவர்கள் எழுந்திருந் தெங்களையும்
சிறந்த மணத்தோடு உடன்சேர வந்திடவும்
பழிசெய்த சோழனுசர் பகலநரி ஓடிடவும்
அழிவாகிச் சோழன் அவன்மாண்டுப் போயிடவும்
வரந்தாரு மென்று மாயவரை நெஞ்சில்வைத்துப்
பரமானப் பெண்கள் பாரத் தவசுநின்றார்

ஸ்ரீரங்கம் விட்டுச் சுவாமி அனந்தபுரம் ஏகல்

இப்படியே மாதர் இங்கே தவசிருக்க
அப்படியே மாயன் அவர்ஸ்ரீ ரங்கமதில்
இருக்கும் பொழுது இரணியநீ சக்கலியன்
கருக்காக லோகம் கண்டவிட மேபரந்து
ஸ்ரீரங்க மானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள்
நிதங் குளறி நெறிதவறிப் போனதினால்
முறைவைத்த பூசை முந்தி முறையெனவே
மறையவனும் பூசை வந்தே முகித்திடவே
பொறாமல் மற்றொருவன் பூசையெனக் கென்றுசொல்லி 120

மறவாத மாயவரை வணங்கிநிட்டை செய்யவென்று
முப்பது வேள்வி மொகுமொகெனத் தான்வளர்த்து
இப்போ நான்வீழ்வேன் இதில்மாயன் வாராட்டால்
என்றவ னெண்ணி ஏற்றவோ மம்வளர்த்து
அன்றவன் வீழ ஆர்ப்பரிக்கு மவ்வளவில்
மறையவனை மாயன் வந்தெடுத்துப் புத்திசொல்லி
நிறையொத்த மாயன் நெடுமறையோ னைக்கூட்டி
ஸ்ரீரங்கம் விட்டுத் திருவனந் தம்நோக்கிச்
சாரங்கர் போகத் தானேகும் வேளையிலே
நன்றான கேத்திரனும் நல்லமறை வேதியனும்
அன்றிளகிச் சென்று அரனார் திருக்கோவில்
வந்த பொழுது வானமதி லுள்ளோரும்
நந்நகோ பால நாரா யணரிடத்தில்
சென்று தொழுது தேவரெல்லாந் தெண்டனிட்டு
இன்று பெருமாள் இங்கே யெழுந்தருளி
வந்த வகையேது மாயவரே யென்றுசொல்லி
அந்தமுனி தேவர்களும் அச்சுதரோ டீதுரைக்க
நல்லதென்று அய்யா நாரா யணர்மகிழ்ந்து
வல்ல பரமே சுரரை மிகவாழ்த்தி
ஈசுரரே யென்றனக்கு இங்கிருக்கக் கூடாமல் 140

தேச மதைப்பார்த்துத் திருவ னந்தமேகி
இருக்கவே யென்று எழுந்தருளி வந்தேன்காண்
மருக்கிதழு மீசுரரும் மாமுனிவர் தேவர்களும்
நீசனாய்த் தோன்றி நிரந்து பரந்திருந்த
தேசத் திருவனந்தம் செல்லவகை யேதுவையா
அல்லாமல் நீசன் அவனிடத்தில் போயிருந்தால்
எல்லா மவன்றனக்கு ஈடாகிப் போகுமல்லோ
கைவாய்த்து தென்று கலியனவன் கொண்டாடி
மெய்வாய்த்து தென்று மேலாக மாநீசன்
பரிகாசங் செய்வானே பார்முழுது மாநீசன்
ஆனதா லங்கேக அச்சுதரே ஞாயமில்லை
மான மழிந்தாச்சே மாகலியன் வந்ததினால்
எல்லாங் கழியை ஈடழிக்கப் பாருமையா
இல்லையே யானால் எங்களுக் கிங்கேதான்
சென்ற இடமெல்லாம் சிறைபோ லிருக்குதையா
என்றுதான் தேவர் ஈசர்முதல் சொல்லிடவே
அன்று அவர்களுக்கு அச்சுதரு மேதுரைப்பார்
நன்றுநன்று வானவரே நல்லபர மேசுரரே
கலியேது நீசம் காணேது வையகத்தில்
சலிவேது ராச்சியத்தில் தானேதும் நானறியேன் 160

அனந்தபுரம் போக ஆதியி லென்றனக்குத்
தனந்தசுக முனிவன் சாபமுண் டானதினால்
கொஞ்சநா ளானாலும் குடியிருக்க வேணுமங்கே
வஞ்சகங்க ளில்லாத மாயன்வழி கொண்டனராம்
ஈசர்தனை யனுப்பி எம்பெருமா ளச்சுதரும்
வாசமுள்ள சேத்திரனும் மறையவனுந் தேவர்களும்
சங்க மதுகூடித் தத்திதத்தி யாய்வரவே
வங்கத் திருவனந்தம் வழிநோக்கித் தான்வரவே

பிரம்ம ரிஷிகள்

வழியிலோ ரற்புதந்தான் மாயவனார் கண்டுமிகக்
களிகூர்ந் தவருடனே கட்டாக ஏதுரைப்பார்
மாமுனியே தேவர்களோ வழியி லொழுங்கொழுங்காய்
ஓமுனியே நின்றதையும் உரைப்பீர்கா ணென்றுரைத்தார்
அப்போது மாமுனியில் அருண முனிவனொன்று
செப்போடு வொத்த திருமாலை யும்பணிந்து
மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில்
ஆய கலையிருஷி ஐம்பத் தொருநான்கோர்
பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத் திவ்விருஷி
வரமான புத்தகத்தை மாறாட்டஞ் செய்ததினால்
அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச்
செறிந்த இருஷிகளைச் சிலைக்கல்லாய்ச் சாபமிட்டார் 180

அப்பொழு திவ்விருஷி அயனைத்துதித் திச்சாபம்
எப்பொழு திச்சாபம் ஏகுமென்றார் மாயவரே
வேதா தெளிந்து விஷ்ணுஸ்ரீ ரங்கம்விட்டுத்
தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே
வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார்
சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன்
தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷி யானோர்க்குப்
பேருல கம்படைத்த பிரமன் விடைகொடுத்தார்
அந்தப் பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி
இந்தக் கற்சிலையாய் இவரிருந் தாரெனவே
மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று
தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டா ரம்மானை
உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத்
தடமேலே வீழ்ந்து தானாவி யேகுவித்து
அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம்
இன்றகல வைத்து இரட்சிக்க வந்தவரே
எங்களுக்கு நல்லகதி ஈந்துதா ருமெனவே
திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றிநின்றார்
நல்லதுதா னென்று நாரா யணர்மகிழ்ந்து
வல்ல இருஷிகளே வாழ்வெங்கே வேணுமென்றார் 200

மேலோக வாழ்வு வேணுமோ அல்லவென்றால்
பூலோக வாழ்வு போதுமோ வென்றுரைத்தார்
அப்போ திருஷியெல்லாம் அவனியி லெங்களுக்கு
இப்போ வரங்கள்தந்து ஏகவைத்தால் போதுமையா
நல்லதுதா னென்று நல்ல இருஷிகட்கு
வல்லத் திருமால் வரங்கொடுப்பா ரம்மானை
பிச்சையது வாங்கிப் பெருமை யதாயருந்தி
மிச்சமது வைக்காமல் விழிபரந்து பாராமல்
சீமைக்கொரு இருஷி செல்லுங்கோ ஆண்டியெனத்
தாண்மை பரதேசி தானாகி வீற்றிருந்து
பூசை பெலிகள் பீடமிட் டேராதிருந்து
ஆசைக் கருத்தை அறுத்து வொருநினைவாய்
மாசணு காமல் மனதில் நமைத்துதித்து
ஓசை யுடனே உலக மதில்நீங்கள்
வைகுண்ட மென்று வையகத்தே வாழுமென்று
பொய்குண்டம் நீக்கிப் பூலோக மேயிருங்கோ
தந்த வரத்தில் தப்பி நடந்ததுண்டால்
வந்தங் கிருந்து வருத்தியுங்கள் தம்மையெல்லாம்
அவரவர்கள் செய்த அக்குற்றந் தான்கேட்டு
எவரெவர்க்குந் தக்க இயல்பே தருவோமென்றார் 220

நல்லதுதா னென்று நாடி இருஷியெல்லாம்
செல்லப்பர தேசிகளாய்ச் சென்றாரே சீமையிலே
இருஷி களையனுப்பி எம்பெருமாள் தான்மகிழ்ந்து
துரிச முடனனந்த சீமைநோக் கிநடக்கத்
தேவர்களும் வானவரும் ஜேஜே யெனநடக்கத்
தாவமுட னனந்தம் தானோக்கி மால்நடக்க
அனந்த புரம்நோக்கி அச்சுதனா ரேகுகையில்

எக்காள துர்க்கை

புனந்தனிலோர் பொருப்புப் பூவையுருப் போல்கிடக்கக்
கண்டெம் பெருமாள் கால்கொண் டுதைத்திடவே
குன்றுபோ லேயுடம்பும் குஞ்சரம்போல் கைகாலும்
துண்டு மலைபோல் துய்யமூக்கு முலையும்
வாய்கண் ணொருமலையாம் வயிறுமூணு மலையாம்
கொண்டை பன்னிரண்டு குறுக்கமுண் டன்போரே
பண்டே திருமால் பம்பழித்தத் தாடகைபோல்
நின்றாளே யண்டபிண்டம் நிறைந்த சொரூபமதாய்
கண்டாரே எம்பெருமாள் கனத்தவி சேடமென்று
தேவர்களே வானவரே சேத்திரனே வேதியனே
பாவலரே கல்தான் பரும்பெண்ணாய் வந்ததென்ன
சொல்லுவீ ரென்று திருமா லுரைத்திடவே
வெல்லும் புகழ்தேவர் விளம்புவா ரம்மானை 240

ஏம னிணையான எக்காளத் துர்க்கையிவள்
சாமி சிவனார்தன் சொல்லையிவள் தட்டினதால்
கோபித் திவளைக் குன்றுபோல் சாபமிட்டார்
ஏகி வரும்போது இவள்தானு மீசுரரை
வணங்கியிச் சாபமெப்போ மாறுமென்றாள் மாயவரே
அணங்குக்கு ஈசர் அருளினது கேளுமையா
அனந்த புரமதிலே ஆனநதி மேலே
வனந்தமால் பள்ளிகொள்ள வருகின்ற அவ்வழியில்
உன்சாபந் தீர்த்து உன்னை உலகதிலே
பின்சாப மிட்டுப் போக விடைதருவார்
என்று சிவமுரைக்க இப்படியே வந்தவளும்
குன்றுபோ லேகிடந்தாள் குருவேயுன் பாதமதால்
அவள்சாபந் தீர்ந்து ஆயிழை போல்வடிவாய்
இவள்தானும் வந்தாள் எனச்சொன்னார் தேவர்களும்
நல்லதென்று நாரணரும் நாரிதனைக் கொண்டாடி
வல்லவளே யெக்காள மடந்தையே யுன்றனக்கு
ஏதுனக்கு வேணுமென்று என்னோடு கேளுஎன்றார்
வாதுக்கு வல்லகியாள் மாய ருடன்கேட்பாள்
நாரணரே அய்யாவே நான்தான் முற்காலமதில்
பாரமுள்ள செந்திருஷி பாரியாய் நானிருந்தேன் 260

அப்போது என்றனக்கு அழகிது இல்லையையா
செப்போடு வொத்த சிவகாமி போலழகு
நன்றாக என்னுடைய நல்லபர்த் தாவுடனே
ஒன்றாக வாழ்ந்து உறவா டிருக்கையிலே
என்பேரி லிச்சை ஏமன்மிகக் கொண்டாடி
வம்புசெய் தென்னுடைய மன்னவனைக் கொன்றான்காண்
ஆனதா லேமனுக்கு அழிவுவர வேணுமென்று
மானத் தவமிருந்து வருந்தினே னீசுரரை
அப்போது ஈசுரரும் அடியாள் மனந்திருத்தி
இப்போது அந்தகனை இறக்கவைத்தால் ராச்சியத்தில்
நருட்பெருத்துப் பூலோக நாடுதரியா தெனவே
பொறுத்துக்கோ கொஞ்சம் பூவையே யென்றுரைத்தார்
என்னை மனந்திருத்தி ஏமனோடே சேர்த்தாலும்
மன்னனை வதைத்ததுதான் மறவாம லெப்போதும்
திவசமொரு நேரம் சிவனாரை யானோக்கிப்
பவத இயமனுக்குப் பகையாகக் கேட்டிருந்தேன்
ஆனதா லீசர் அறிந்தே யெனைநோக்கி
ஈன முடன்பேசி இகழ்த்தினா ரீசுரரும்
கொஞ்சம் பொறுக்கவென்று கூறினேன் பெண்கொடியே
மிஞ்சவல்லோ செய்தாய் எனவெகுண் டாதிபரன் 280

மலைபோ லுடம்பும் வயிறு மிகப்பெருத்து
அலைபோற் பரந்த அங்கம் பெரும்புடமாய்க்
கல்லது போற்கிடந்து காலனைக் கொல்லும்வகை
வல்ல வகையாலும் வருந்திக்கோ என்றுசொல்லிக்
கோபித்தார் முன்னே குன்றுபோ லேகிடக்கச்
சாபித்தா ரென்னை சாமியுன் பாதமதால்
தோன்றினே னென்சாபத் துயரறுத்தேன் மாயவரே
வீன்றிய அந்தகனை வேரோ டறுத்திடவே
வரந்தா ருமையா மாயவரே யென்றுசொல்லி
சிரமுரத்தப் பெண்கொடியாள் தெண்டனிட்டாள் மாயவரை
அப்போது மாயவரும் அவளை முகம்நோக்கி
இப்போது பெண்கொடியே யான்சொல்லக் கேட்டிடுநீ
அந்தகனைக் கொல்லவென்று அருந்தவசு பண்ணிடுநீ
வந்த யுகமாறி வலியபெலத் தர்மயுகம்
உதிக்கும் பொழுதில் உன்தவ சின்படியே
சதிக்குகந்து தானால் சண்டனழி வாகுமென்றார்
அப்போது பெண்கொடியும் மானத் தவம்வளர
இப்போ விடையருளும் என்றுகேட்டு வேண்டியவள்
நின்றாள் தவத்தில் நீலியாய்ச் சண்டனுக்கு
வண்டூறிக் கன்னி மன்னன் பழிவாங்க 300

ஆதியைப் போற்றி அருந்தவசு பண்ணிடவே
சோதித் திருமால் திருவனந் தம்நோக்கி
நடக்கத் திருமால் நளின முடன்மகிழ்ந்து
வடக்குக் கயிலாச வழியே வருகையிலே

வானோர்க்கு அருளல்

தெய்வலோகத் திலுள்ள தேவாதி தேவர்களும்
வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும்
சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும்
தவமான வேதச் சதுர்மறையோன் தன்னுகத்தில்
கருதி ரிஷிமுதலாய்க் கட்டாக நாற்புவியில்
இருக்கின்ற வானவர்கள் எல்லோரு மெண்ணமுற்று
மான வரம்பு மகிமைகெட் டேகுமுன்னே
வான மதுவிட்டு வடகயிலை போவோம்நாம்
கயிலை வரம்பழிந்து கட்டுமிகத் தப்பினதால்
அகில மழிவதற்கு அடையாள மித்தனைதான்
அல்லாமல் குறோணிமுதல் அந்நீசக் கலியன்வரை
எல்லாஞ் சரியாகி எவ்வோர்க ளானாலும்
கல்லாத பொல்லாக் கலியனுட மாய்கையினால்
நல்லோராய் மேற்பிறந்து நளினமுற்று வாழ்வரென்று
வேதா கணக்கில் விதித்துரைத்தார் முன்னாளில்
நாதாந்த வேதம் நழுவிமிகப் போகாதே 320

இப்படியே தேவர் எண்ணமுற்று வாடினரே
முப்படியே யுள்ள ஊழிவி தியெனவே
கடைச்சாதி யான கலிச்சாதி யானதிலே
படையாமல் நம்முடைய பங்குவம்மி சத்தோராய்
ஒண்ணா மதுகுலந்தான் உயர்தெய்வச் சான்றோரில்
வண்ணமுள்ள வேதா மனுவாய்ப் பிறவிசெய்ய
ஒன்றாக நாமளெல்லாம் உவந்துதவஞ் செய்யவென்று
நின்றார் தவத்தில் நிறைவோன் பதம்போற்றி
தங்கள் குலமான சான்றோர்கள் தங்குலத்தில்
எங்கள் தமைப்பிறவி இப்போசெய்ய வேணுமென்று
பிறந்திறந்த போதும் பின்னுமந் தப்பிதிரில்
மறந்திடா வண்ணம் மனுவி லுதித்திடவும்
ஆதிமகா மூலத்து ஆதிநா ராயணரே
நாதியா யெங்களையும் நாடிமிக வந்தெடுத்து
எங்கள் துயரம் எல்லா மவர்மாற்றி
சங்கடங்க ளில்லாத தர்ம பதியருளிக்
கிரீடமுஞ் செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும்
வீரியமாய்த் தந்து மேலோக முமகிழ
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பதவிதந்து
மண்விண் புகழ வரந்தாரு மென்றுசொல்லி 340

நின்றா ரதையும் நெடியோன தையறிந்து
கொண்டாடி யேதெனவே கூறினார் தேவருடன்
நின்ற நினைவை நெடுமால் தனக்குரைக்க
அன்றந்தத் தேவருக்கு அலையாத புத்திசொல்லி
நல்லதுதான் தேவர்களே நாடுவது காரியந்தான்
வல்ல தவசு மனம்பிரியாச் செய்யுமென்றார்

பசுவும் பெண்ணும்

அச்சுதரும் தானடந்து அனந்தபுர மேகுகையில்
பச்சுடம்பாய் நின்ற பசுவுமோ ரேந்திழையும்
நாராய ணாவெனவே நாடித் தவமிருக்கச்
சீராய்த் திருமால் சிறந்ததவங் கண்டருளி
ஏது பசுவே ஏந்திழையே வுங்களுக்கு
நேதுவில்லா வண்ணம் நெடுந்தவசு பண்ணினதேன்
அப்போ துபசுவும் அச்சுதருக் கேதுரைக்கும்
இப்போது மாயவரே என்னுடைய புத்திரனைக்
கொல்லும் படியாய்க் கோதை யிவள்தவசு
செல்லும் படியாய்ச் சிந்தை மிகக்கலங்கி
புத்திரனு மாண்டால் பிள்ளையா யென்றனக்கு
உத்திரக் கன்றாய் உடன்பிறக்க வேணுமென்று
நின்றேன் தவசு நீலவண்ண ருண்டெனவே
என்றே பசுவும் ஈதுரைக்க ஏந்திழையும் 360

நன்றாகப் பார்த்து நாரா யணருரைப்பார்
ஒண்டொடியே உன்றன் உற்றவழக் கேவுரைநீ
அப்போது பெண்கொடியும் அச்சுதரைத் தானோக்கிச்
செப்போடு வொத்த தேவியுஞ் சொல்லலுற்றாள்
அய்யாவே யெனக்கு ஆளான வீரனைப்போல்
மெய்யா யொருமதலை விமல னருளினர்காண்
மதலை வளர்ந்து வயதுபதினா லாகுகையில்
குதலை மொழிகேட்டுக் கொண்டாடி நான்மகிழ்ந்து
இருக்குமந் தநாளில் இப்பசுவின் புத்தினர்தான்
உருக்கமுட னென்பேரில் உள்ளாசை கொண்டான்காண்
அதட்டினே னானதற்கு ஆகட் டெனவுறுக்கி
மதட்டி மதலைதனை மாளவைத்தான் மாபாவி
ஆனதி னாலடியாள் அறமெலிந்து தான்வாடி
போனேன் பிரமா பூசாந்திரக் கணக்கில்
உள்ள விதியோ ஊழி விதிப்படியோ
கள்ளக் கணக்கன் கண்மாயமோ எனவே
பார்த்தேன் மகன்தான் படவிதி யங்குமில்லை
ஆர்த்தேன் நான்கோபம் அக்கினிபோ லெமீறி
சிவனுக் கபயம் செவியறிய விட்டேனான்
இவளுக்கு வேண்வடி ஏதுசெய்வோ மென்றுசொல்லி 380

ஒருவரு மென்னுடைய ஊழிவிதி கேட்கவில்லை
வருவது வரட்டெனவே வந்தே தவசுநின்று
மகன்பழிதான் வாங்க மாயவரே உம்மருளை
அகமிருத்தி நானும் அருந்தவசு செய்தேனான்
என்றுரைக்க ஏந்திழையும் எம்பெருமா ளேதுரைப்பார்
நன்றுநன்று பெண்கொடியே நல்ல தவம்புரிந்தால்
நினைத்த படியே நிறைவேறு மென்றுரைத்துக்
கனத்த பசுவேநீ கட்டாய்த் தவமிருந்தால்
உன்றனக்குச் சித்திரனும் ஒருகன்றாய்த் தான்பிறந்து
உன்றன் மகனார்க்கு ஏவல்செய்ய வைத்திடுவேன்
என்று பசுவதுக்கும் ஏந்திழைக்குந் தானுரைத்து
அன்று திருவனந்தம் அவர்நோக்கித் தானடந்து

சேத்திர பாலனுக்குச் சொன்னது

கேத்திரனும் வேதியனும் கிருஷ்ண ரடிபணிந்து
மூர்த்திகளுங் காணாத முதலே முதற்பொருளே
உன்மகவாய் வந்துதித்த உயர்ந்த குலச்சான்றோர்
தன்கமவோ ரங்கே தவித்துமுகம் வாடிருக்க
நீசனுட குடியில் நீர்போகக் காரியமோ
தேசமெல்லாம் நீசனுட செய்திகேட் டேயிருந்தும்
போவதோ தேவரீர் பொல்லா தவன்குடியில்
தேவரீ ரும்முடைய சிந்தையெள் போலறியேன் 400

என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று கேத்திரனே நான்சொல்லக் கேட்டிடுநீ
சான்றோர்க் குபகாரம் தான்செய்யு முன்னாகப்
பொன்றுகலி நீசனுக்குப் புத்திசொல்ல வேணுமென்றும்
அல்லாமற் குறோணி அவன்மாய யிவன்வரையும்
எல்லாந்தான் சொல்லுக்கு இடறுவை யாதபடி
சான்றோர்கள் தம்மிடத்தில் சாங்கமாய்ப் போயிருந்து
ஆன்றோர்தா னெங்களையும் அழியவைத்தீ ரென்றுரைப்பான்
ஆனதால் நானும் அதற்கிடைகள் வையாமல்
ஈன முறுநீசன் இடம்போறே னென்றுரைத்தார்
அப்போது கேத்திரனும் அன்பா யகமகிழ்ந்து
செப்போடு வொத்த திருமாலைத் தெண்டனிட்டு
மாயனே உன்றன் மகிமையதை யாரறிவார்
ஆயனே வும்முடைய அளவறியக் கூடாது
என்று கேத்திரனும் இயம்புவான் பின்னுமொன்று
மன்று தனையளந்த மாயப் பெருமாளே
பூசை புனக்காரம் பெரியதீ பத்துடனே
நீச னுமக்கு நினைத்துநிதஞ் செய்வானே
எந்தனக் கென்ன இலக்குக் குறியெனவே
சிந்தை தெளிந்து செப்பி விடைதாரும் 420

என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
இன்றுநீ கேட்டதற்கு இயல்புரைக் கக்கேளு
கலிநீசன் மாநிலத்தில் கால்வைத்து அன்றுமுதல்
சலிவாகி யென்மேனி தண்ணீ ரறியாது
எண்ணை யறியேன் இலட்சுமியை நானறியேன்
வண்ணத் துகிலறியேன் மறுபுடவை தானறியேன்
பூசை யறியேன் பொசிப்பறியேன் பூவறியேன்
ஆசை யறியேன் அக்கக் கிளையறியேன்
மெத்தை யறியேன் மேவுஞ் சொகுசறியேன்
ஒற்றைபோ லானேன் உட்கார்ந் திருக்கறியேன்
மேடை யறியேன் மகிழுஞ் சிரிப்பறியேன்
தோழமையை நானறியேன் சுருதி மொழியறியேன்
ஆளவை குண்டம் அரசுமே டையறியேன்
இத்தனைகள் தானறியா(து) எண்ணமது நானறியேன்
புத்தியுள்ள கேத்திரனே பூசைபூ ஏற்பதெல்லாம்
மாயக் கலியறுத்து வாய்த்தநா டாள்வார்க்கு
ஞாயமுள்ள பட்டம் நான்சூட்டித் தர்மமதாய்
இராச்சியத்தை யாளவைத்து இத்தனையு மேற்பதல்லால்
அதற்குமுன் பூசை புனக்காரமுத லேற்பதில்லை
இதற்குமுன் னேற்பவர்கள் எனக்காகா தேபோவார் 440
என்றந்தக் கேத்திரனுக்(கு) இத்தனையுந் தான்கூறி
அன்றந்த நீசன் அவ்வூரி லெம்பெருமாள்

புலச்சிக்கு அருளியது

நீச னிடத்தில் நீலவண்ணர் வந்ததுதான்
தேச மறிய செச்சை புலச்சிகண்டு
ஒளித்தா ரொருஇடத்தில் ஊர்தேச முமறிய
விழித்தாள் புலச்சி விதமறிந் தெல்லோரும்
நீச னறிந்து நெருங்கமணி மேடைவைத்து
வீசை முறுக்கி விசையாக அந்நீசன்
கோவில் சிவாலயங்கள் கொந்துகொந் தாயமைத்துப்
பாவித்துப் பூசை பண்ணத் துணிந்தனனே
மேடைக்குக் கால்கள் மிகுத்தத்தங்கத் தால்நிறுத்தி
வாடைக் கமகமென வாத்தியங்கள் நின்றதிர
தீபம் புலச்சி தீவட்டித் தான்கொடுக்கப்
பாவக் குடும்பத்தோர் பண்ணினார் பூசையது
நம்பூரி வேதியர்கள் நாடி யகமகிழ்ந்து
பம்பைப் பரத்தை பகட்டுக்கை காட்டலோடு
நாடி மகிழ்ந்து நல்ல அனந்தபுரம்
கோடிநூ றாயிரம்போல் கூண்டரிய தீபமொடு
தேடரிய மாமறையோர் சிந்தைகளித் தேயிருக்க
நாடதிக மாகி நல்ல அனந்தபுரம் 460

மாத மும்மாரி வருசிக்கத் தான்பொழிந்து
வாரமுடன் செந்நெல் மாறாம லேவிளைந்து
தென்னங் குலைசிதறித் தேர்ப்போ லலங்கரித்து
என்னென்ன பவிசு எல்லா மிகப்பெருத்து
ஒப்பில்லாத் தேசம் உற்ற அனந்தபுரம்
செப்பத் தொலையாது சிறந்தப் பெருமையது
நன்றாகச் சீமை நாடோறு மேவாழ்க
அன்றுஸ்ரீ ரங்கர் அங்கே யகமகிழ்ந்து
நீசன் நினைத்த நினைவுபோ லெம்பெருமாள்
தேசப் பவிசும் சிறப்பு மிகக்கொடுத்து
நீசன் தனக்கெதிரி நீணிலத்தி லில்லையென்று
தோசக் கலிப்புவியைச் சூட்டியர சாளுகையில்

கலியரசன் தவம்

மதலைய தில்லாமல் மனஞ்சலித்து மாநீசன்
குதலையி னேதுவினால் கொஞ்சஞ் சடைவாகி
ஆதித் திருமால் அடியை மிகப்போற்றிச்
சோதியே யென்றனக்குச் சிறுவனொன்று தாருமென்றான்
அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது உனக்கு இங்கிருந் தால்மதலை
கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில்
திட்ட முடன்தவசு செய்யப்போ யங்கிருந்தால் 480

மதலையுட துயரம் மாறுங்கா ணுன்றனக்குப்
பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்கா ணம்மானை
கேட்டந்த நீசன் கெட்டிதா னென்றுசொல்லி
நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந் தான்வருத்திப்
போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில்
சேனா பதிகள் திக்கெங்குஞ் சூழ்ந்துநிற்க
நீசன் தவசு நிற்க வொருமறையோன்
வாசக் குழலோடு மருவினன்கா ணம்மானை
கண்டந்த நீசன் காமம் பொறுக்காமல்
தண்டுமீ றிக்காமம் சலத்தில் விழுந்ததுவே
இரைநமக் கென்று எட்டியொரு கொக்காவி
விரைவாய் விழுங்க மிகுத்தகர்ப்ப முண்டாகித்
தண்ணீரில் பிள்ளை தான்பெற்று தம்மானை
வெண்ணிற மான மிகுத்தபிள்ளை தான்மிதந்து
போகும் பொழுதில் புனலரிஷி மாமுனிவன்
தாப முடன்சிசுவை தானெடுத்தா னம்மானை
மதலை தனையெடுத்து வளர்த்துப் பருவமதில்
குதலை தனையாற்றில் குளியோட நீச்சலதும்
தோணியே றுந்தொழிலும் சுருக்குக்கப் பலேற்தொழிலும்
ஆணிப்பொன் முத்து அதுவளருந் தலமும் 500

வெள்ளித் தலமும் மிகுத்தபொன் னுத்தலமும்
உள்ளவித்தை யான உற்றரச வாதமுதல்
கள்ள உபாயக் கபடுபலத் தந்திரமும்
வெள்ளை நீசன்தனக்கு விதமா யவர்வருத்திச்
செங்கோ மட்டியெனத் தேசநசு ராணிகளில்
பெண்கள் ரண்டுபேரைப் பேறாய் மணமகித்து
இருத்தினான் மாமுனிவன் ஏற்றசெங் கோமட்டியில்
பருத்த வெள்ளைநீசன் பண்பாக அங்கிருக்க
நின்ற தவசு நெறியழிந்து மாநீசன்
அன்றந்தப் பாவி அனந்தபுரம் வந்தனனே
வந்து சடைவாய் மாநீசன் தானிருக்கச்
சந்துபயில் மாயவரும் தானறிந் தேதுரைப்பார்
மன்னவனே யுன்றனக்கு மதலையது கிட்டினதோ
என்ன விதங்காண் ஏகிவந்த தென்றுரைத்தார்
அப்போது நீசன் அவனேது சொல்லலுற்றான்
இப்போது மாயவரே யான்தவசு நிற்கையிலே
மறையவனுந் தேவியோடு மருவினதைக் கண்டாவி
இறையவரே யென்றனக்கு இந்திரியந் தானிளகி
ஆனதால் தவசு அழிந்தே னதினாலே
ஈனமுடன் மதலை இல்லையென்றா ரீசுரரும் 520

மதலையில் லாதிருந்தால் வையகத்துக் கேராது
குதலையல்லோ வேணும் குவலயத்தை யாளுதற்குச்
செங்கோ லரசு செலுத்தியர சாளுதற்கு
முன்கை சிரைத்து முறைகர்மஞ் செய்திடவும்
பிள்ளையில்லா தேயிருந்தால் போதுமோ புண்ணியரே
வள்ளலந்த மாலும் மறுத்துரைப்பா ரம்மானை
சொந்தமுள்ள சோதிரியைச் சுறுக்காய் வரவழைத்து
உந்தனக்குப் பிள்ளை உண்டோதா னில்லையென்று
வருத்திக்கே ளப்போ வகைசொல்வான் சோதிரிசி
பொருத்தமா யாயன் புகன்றாரே நீசனுக்கு

மருமக்கள் வழி

நல்லதென்று வேதியனை நாடி யவனழைத்துச்
சொல்லவென்று நீசன் தொகுத்தவனோ டேகேட்க
அப்போது சோதிரிசி அந்நீ சனைப்பார்த்து
இப்போது கேள்நீ ஆகமத்தி லுள்ளமுறை
பெற்றாலு முன்மகவு பேருலகம் ஆளாது
மற்றோர்பெற் றுன்மருகன் ஆளுவான் வையகத்தை
என்றேதான் சாஸ்திரமும் இசையுதுகாண் மன்னவனே
அன்றேதான் சோதிரியும் அந்நீசனுக் குரைத்தான்
நல்லதென்று நீசன் நாடி யகமகிழ்ந்து
வல்ல வகையாலும் வைத்தபங்குக் கிட்டுமென்று 540

சோதிரியைத் தானனுப்பித் துயர்நீங்கி யேயிருந்தான்
ஆதி முறைப்படியே அவன்மரு கன்றனக்குப்
பட்டந்தா னென்று பறைசாற்றி யாண்டிருந்தான்
திட்டமுடன் நீசன் தேசமதை யாளுகையில்
முன்னீசன் விந்தில் உதித்துவளர்ந் தேயிருந்த
அந்நீச னான அசுபக் கிரிவளமை

வெண்ணீசன்

சொல்லவே நாதன் தொகுத்துக்கே ளன்போரே
வல்லசெங் கோமட்டி வையகத்தி லந்நீசன்
வெள்ளி மலையும் மிகுத்ததங்கப் பொன்மலையும்
கள்ளமில்லா வாதம் கைகண்ட வித்தையதாய்
நிதியிற் பெருத்து நெருங்கப் படைகூட்டிப்
பரியானை ஒட்டகங்கள் பலபடைகள் சேகரித்து
ஆளும் படையும் ஆயுதங்க ளஸ்திரமும்
வேழும் பெரிய வெகுவாணு வங்கூட்டித்
தன்னோ டினங்கள் சதாகோடி யாய்ப்பெருத்து
என்னோ டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று
அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து
எவர்தா டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று
அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து
எவர்தா னெதிரியென்று எண்ணமுற்று மாநீசன்
நட்சேத் திரத்தை நகட்டிருபத் தெட்டாக்கி
வைத்தானே மாதம் வருசமது மாறாய் 560

முன்னீசன் வைத்த முறைமை யிலுங்கூட்டிப்
பின்வந்த நீசன் பிரித்தானொன் றேற்றமுடன்
அரிநமா வென்ற அட்சரத்தை விட்டவனும்
விரியாய் அனாதியென விளம்பினான் வையகத்தில்
இப்படியே வைத்த இவன்வேத மானதுக்குள்
அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று
பணமா னதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரைச்
சிணமாக மானிடவர் சேர்ந்தா ரவன்வேதமதில்
இப்படியே வேதமொன்று இவன்பலத்தா லுண்டாக்கி
அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான்
ஆணுவங்கள் சேனை ஆயுதங் கள்வெகுவாய்
வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோ ரெம்பரெம்ப
படையாலு மற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான்
தடைசெய்து நம்மைத் தடுப்பவரா ரென்றுசொல்லி
ஆரா ரெதிரியென்று அவன்பார்த் திருக்கையிலே
பூராய மாயொருவன் போதித்தா னவன்றனக்குச்
சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே 580

வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே
சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால்
அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
செந்தார மாயன் சேனை வருவதையும்
அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ் சொல்லலுற்றார்
வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி
நசுறாணி யான நல்லவெண் ணீசனுக்குத்
துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால் 600

எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே
மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான்
அப்போது அந்த அன்னீத மாநீசன்
இப்போது படையை யாம்வெற்றி கொண்டோமென்று
கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டித்
தாட்டிமையா யுலகில் சட்டமது வைத்தனனே
வைக்கும் பொழுதில் மாயவரைத் தானோக்கிச்
செய்க்கும் பெரிய திருமாலே யென்றனக்குக்
கைக்குள்ளே ஏவல் கருத்தாகச் செய்வதற்கு
மெய்க்குணம்போ லுள்ள விதமான சாதியொன்று
வருவித்து என்றனுட மணிவாசல் காத்திருக்கத்
தருவித்து நல்ல சாதியொன் றென்றுரைத்தான்
அப்போது மாயன் அதற்கேது சொல்லலுற்றார்
இப்போது உன்றனக்கு ஏவல் தொழில்கள்செய்ய
ஆகின்ற பேரை அழைத்துக்கோ என்றுரைத்தார்
வேகுன்ற நீசன் விளம்புவா னமைச்சருடன்
ஆரைக் கொடுவரலாம் அருகில்விட்டு வேலைசெய்ய
ஏரையொத்த மந்திரியே இயம்பு மெனக்கேட்டான்
அப்போது மந்திரிகள் அந்நீசனுக் குரைப்பார்
இப்போது வேறொருவர் இருந்தாலா காதெனவே 620

நல்லவகை யான நாடுஞ்சான் றோர்களைத்தான்
வல்லவகை யாலும் வருவித்து வைப்பீரால்
ஆகுமந்தச் சாதியென்று அந்நீசனுக் குரைத்தார்
வேகும் பொழுதில் வெற்றிசான் றோர்களுக்கு
ஆள்விட்டு வருத்தி அதிக நிதிகொடுத்து
வாள்கொடுத்து ஆயுத பாணி மிகக்கொடுத்துப்
பட்டயமுங் கொடுத்துப் பாரயிறை கூலிவிட்டுச்
சட்டைக்குல் லாகொடுத்துத் தலைப்பா மிகக்கொடுத்து
வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே
வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள்
ஊழி விதியால் உடையோனை நெஞ்சில்வைத்துக்
காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார்

கலிநீசன் சாபம்

அப்படியே காத்திருந்து அவர்வருகும் வேளையிலே
முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால்
அந்தநீ சன்தனக்கு அழிவுவரும் வேளையிலே
இந்தச் சான்றோர்கள் இவர்தூக்கம் வைத்திடவே
நீசனுட வம்மிசத்தோர் நேரக்கூறே யறிந்து
வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே யவ்வினத்தோர்
சீவன்போ கும்வேளைச் செப்புவான் சாபமொன்று
காவலாய் நீரிருந்து காட்டிக்கொடுத் தீரேயென்று 640

கோபித்தான் சான்றோரைக் கூறழியப் பேசியவன்
சாபித்தான் சான்றோர்க்குச் சத்தியில் லாநீசன்
என்குடும்பத் தோர்கள் இராச்சியத்தை யாளுமட்டும்
உன்குடும்பத் தோர்கள் ஊழியங்கள் செய்துமிக
அழுந்தப்படு வாரெனவும் அந்நீசன் சான்றோர்க்கு
விழுந்த மொழியாய் விரைந்துரைத்தா னேநீசன்
சொல்லியந்த நீசன் சோர்ந்திறந்தா னவன்றன்
வல்லி யுடன்பிறந்த மகன்தேசம் ஆண்டிருந்தான்
நீசனுட சாபம் நீணிலத்தில் சான்றோர்க்கு
மாய வலையாய் வளைந்ததுகா ணன்போரே
தேவ ரதையறிந்து திருமா லிடமேகி
மேவலர்கள் வந்து விளம்பினா ரப்போது
மாயவரே எங்கள் வழியில்வாழ் சான்றோர்க்குப்
பாவிநீ சன்சபித்த பழிசாபங் கேட்டீரோ
சாபத்துல்ப மெல்லாம் தானுரைத்தா ரச்சுதற்குத்
தாமத் திருமேனி தானுரைப்பார் தேவருக்கு
மன்னதியத் தேவர்களே வாய்த்தபுகழ் சான்றோர்க்கு
அந்நீசன் சாபம் அதுவுங் குறிதான்காண்
வம்புள்ள நீசன் வழக்கெல்லா மேற்பதற்கு
அன்புள்ள சான்றோர்க்கு அவனிட்ட சாபமது 660

எத்தனை குற்றம் இவர்செய்து போட்டாலும்
அத்தனையும் நீசன் அவனேற்கக் காரியந்தான்
நல்லதுகாண் தேவர்களே நாடுஞ்சான் றோர்களுக்குத்
தொல்லைவந்தா லுந்தீர தொகைவைத்த லக்குமுண்டு
சோழனுக்குச் சான்றோர் செய்தநன்றி மெத்தவுண்டு
வேழமிட் டிருப்பேரை வெட்டினான் பாரறிய
நீசனுக்குச் சான்றோர் நித்திரைக ளில்லாமல்
வாசல்நடை காத்ததற்கோ வலுதுயரச் சாபமிட்டான்
எல்லா மறிவார் ஈசர்முதல் லோகம்வரை
வல்லாண் மையான வாயத்ததே வாதிகளே
நாமென்ன செய்வோம் நாட்டில்விதி வந்ததற்குப்
போமென்னத் தேவருக்குப் பெரியோன் விடைகொடுத்து
மாயவரு மங்கே மனஞ்சடைத்துத் தானிருந்தார்
வாயக் கலிநீசன் வையகத்தை யாண்டிருக்க
நீசனிட்ட சாபம் நீதிச்சான் றோர்களுக்கு
மாயவினை போலே வளைந்ததுகா ணன்போரே
தம்பி தமையனுக்குச் சத்துருப்போல் தானாகி
வம்புக்குங் கோளு மாநீச னோடுரைத்து
அடிக்கவே கைக்கூலி அவனுக்கே தான்கொடுத்து
முடிக்கும் வரையும் முறைமுறைக்கோள் சொல்லிடுவான் 680

இப்படியே சான்றோர் இவர்கள்நிரப் பில்லாமல்
அப்படியே நீசனுட அன்னீதத்தால் வேறாய்

கலிநீசன் கொடுமை

பிரிந்துதான் சான்றோர் பெருத்த கிலேசமுற்றார்
அறிந்துதான் நீசர் அவர்கள்தொக் காச்செனவே
தாலிக்கு ஆயம் சருகு முதலாயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம்
தாலம தேறும் சான்றோ ருக்காயம்
தூலமுட னரிவாள் தூருவட் டிக்காயம்
தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிகஇறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கைசான் றோர்கருப்புக்
கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே
பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற
ஊழியங்க ளெல்லாம் உரைக்கக்கே ளன்போரே
பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான்
நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான்
கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான் 700

சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக்
கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான்
மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு
வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான்
வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு
வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு
தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை
வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான்
காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும்
மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர்
கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்
விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே
இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும்
பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே
பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே
வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும்
சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று
மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே
உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம்
நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே 720

இப்படியே சான்றோர் இவர்தேடுந் தேட்டையெல்லாம்
அப்படியே நீசன் அவன்பறித்துத் தின்றாலும்
ஞாயமுள்ளச் சான்றோர் நாமமது கேட்டதுண்டால்
நீசக்குலத் தோர்விரட்டி நெடுந்தூரங் கொண்டடிப்பார்
பின்னுமந்தச் சான்றோரைப் பொல்லாதான் கொள்ளுகின்ற
அன்னீத மெல்லாம் அருளக்கே ளாயிளையே
உப்பா லுவரா உபய மெடுத்தவரை
ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான்
குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல்
களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான்
சாணார்கள் தம்பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம்
வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான்
வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ளச் சான்றோரைக்
கட்டிக் சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து
சுமந்து போனாலும் தொகையெண் ணமுங்கேட்டுப்
பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான்
ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம்
வையமது கொள்ளாதே மாதேவுன் னோடுரைத்தால்
ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி
வாச முடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல் 740

நேசமுள்ள சான்றோர் நெடுநாளு மேபதறி
நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ
ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போ லேசான்றோர்
நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர்
கீரியைப்போல் நீசன் கிராணம்போ லேசான்றோர்
பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை
பண்டுநீ சன்பித்த படுசாபந் தன்னாலே
விண்டுரையா வண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார்
இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில் லாதபடி
அப்படியே சான்றோர் அவனூழி யங்கள்செய்து
அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு
வல்லாண்மை யான வரிசை யிறைகள்வைத்துக்
கரிவிறை பாட்டஇறை கண்டபாட் டஇறையும்
தரிசிறை காணாத தரைப்பாட் டஇறையும்
ஆமிசங்க ளில்லாத அன்னீத வம்பிறையும்
நேமித்து வைத்து நிலையுள்ளச் சான்றோரை
அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு
இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டுப்
பெண்ணா ணுடைய பெருமை மிகக்குலைத்து
மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன் 760

சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல்
வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிகப்
பம்பழித்துச் சாணாரைப் பலசாதி யின்கீழாய்த்
தும்பழித்து வேலை தூறுபடக் கொண்டனனே
பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம்
மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே
முக்காலி கட்டி முதுகி லடித்துமிக
மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே
சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம்
ஆனாலுஞ் சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது
கோவில் சிவாலயங்கள் கூடங்கள்சிங் காசனங்கள்
நாவுலகுங் கள்ளாய் நாடி யிருந்தாலும்
சாணான்கள் ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம்
வீணாகச் சாணாரை விரட்டி யடிப்பான்காண்
சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும்
வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத் தோராமல்
சாணான்சா ணானெனவே சண்டாள நீசனெல்லாம்
கோணா துளத்தோரைக் கோட்டிசெய் தேயடித்தான்
தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும்
மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல் 780

சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான் றோரமிர்தம்
ஈனம தில்லாமல் யாபேர்க்கு மீந்தாலும்
பொல்லாத நீசன் பொறுதியுள்ளச் சான்றோரை
கல்லாதான் கூடிக் காணவிடா தேயடித்தான்
நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம்
வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது
அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும்
எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை
எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும்
அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை
பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து
மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து

ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல்

கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு
வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான்
உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும்
என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும்
சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது
வாணாள்க் கிடறு வருமடா மாநீசா
முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும்
உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா 800

ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா
மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில்
பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில்
நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண்
அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக்
கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண்
கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன்
பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில்
மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும்
நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான்
கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே
தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும்
வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார்
தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான்
அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச்
செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது
சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன்
பத்தத் தலையான பார அரக்கனுக்குத்
தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது
வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே 820

பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில்
மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார்
கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி
தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து
நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச்
சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா
உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன்
தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால்
சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு
நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக்
காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு
ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால்
அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால்
பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய்
கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால்
அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா
சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால்
வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும்
தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால் 840

கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும்
நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு
சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா
வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா
திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா
ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று
ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய
அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ
நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து
இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத்
தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்
குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து
வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா
கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே
வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு
தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய்
என்றுநா ராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே
அன்றுஅந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான் 860

மாயவரே நீர்கேளும் வாய்த்தசான் றோர்களைத்தான்
ஆயரே நீரும் அபுருவமாய்ச் சொன்னீரே
சாதிகட் கீழான சாணார்கள் தங்களுக்கு
வீரியமா யித்தனையும் விவரித்துச் சொன்னீரே
சாணார்க்கு வைத்த தலைவீத முள்ளஇறை - என்
வாணா ளழிந்திடினும் மாற்றிவைக்கப் போறதில்லை
என்சீவ னுள்ளளவும் ஏற்றசா ணான்தனக்கு
வன்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை
நீர்தா னுமிந்த நிலைபேர்ந்து சாணாரின்
ஊரா னதிலே உறைந்திருக்கப் போனாலும்
கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை
தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை
என்றந்த நீசன் இத்தனையு மாயருடன்
தாவியு ரைக்கச் சாற்றுவா ரச்சுதரும்
பாவி யுனது பவிசெல்லாந் தான்மாறி
ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே
இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா
உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போ வென்றனையே
ஆனாலுஞ் சாணார்க்கு அடியும்பல ஊழியமும்
மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார் 880

அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து
வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான்
மாலைகா லைநேரம் மாயவனே உன்றனக்குச்
சீலமுள்ளப் பூசை செய்துவ ருவதற்கு
நித்தமொரு நூறுபொன் நினக்குச் செலவுமுண்டே
அத்தனையுங் கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால்
அல்லாம லென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன்
எல்லாத் திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ
என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப்
பொன்பதி னாயிரந்தான் போடணுமே சம்பளங்கள்
இப்பொன்னுக் கெல்லாம் யானெங்கே போவேனடா
அப்பொன்னுக் கெல்லாம் அவனை யடித்தல்லவோ
வேண்டித்தா னித்தனையும் விதானிக்க வேணுமல்லோ
ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ
என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே
உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா
முன்னெல்லாம் நீதான் உதவியோ யென்றனக்கு
இந்நிலத்தை விட்டு எங்கானா லும்போடா
அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிச் 900

சொல்லுவார் பின்னும் சீவனம்போ லுள்ளபுத்தி
பல்லுயிருக் கெல்லாம் படியளக்கு மாலோனும்
இத்தனையும் வேண்டி என்றனக்குப் பூசையது
நித்தமும்நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ
பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்குத்
தேச மறியாதோ செப்பாதோ சாட்சியது
ஏற்கா திருப்பதற்கு ஏற்ற அடையாளம்
தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங் காணலையோ
பின்னுமந்தப் பூசை புனக்கார மானதெல்லாம்
பின்னுங் கடைச்சாதி புலச்சிகை யெச்சித்தீதான்
அறியலையோ நான்தான் அமுதேற் றிருப்பதுதான்
வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ
என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே
அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால்
என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன
போபோ நீதானும் போகு மிடந்தனிலே
நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை
அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே
இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை 920

அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல்

போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில்
வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு
எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும்
நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா
எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து
வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி
நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப்
பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும்
நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித்
தாடாண்மை யான சத்தியமா யென்றனையும்
ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்
வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு
நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி
மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய
திரமான வாயு சேடன் முதலறிய
வருண னறிய மதியு மிகவறிய
தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன்
அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால்
பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார் 940

என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான்
அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி
நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய
தேசமெல்லாம் நித்திரா தேவி யிருள்மூட
ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி
வெளுவே ளெனமாரி வெண்டூளி போல்தொளிய
வாயு வதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க
வீசுவீ சென்று உலாவி யதுவீச
வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க
மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று
மாநீச னிட்டிருந்த வாய்த்தகற் கோட்டையெல்லாம்
தேனியீன் கூடதுபோல் செகலிடிந்த தம்மானை
கோட்டைத் தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து
பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம்
உழைந்து மிகவெருவி ஓகோவென வுளறி
கழைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே
சிப்பாயி யோட சுபேதாருந் தானோட
அப்பப்பா வென்று அந்நீசன் தானோட
பிராமண நம்பூரி புலம்பிமிகத் தானழுது
ஸ்ரீராமனையுங் காணலையே தேசமிரு ளாகுதல்லோ 960

அய்யோ கெடுத்தானே அரசன்நம்மை யென்றுசொல்லி
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள்
மாய னனந்த புரத்திலே வாழுமட்டும்
நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில்
ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன்
பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம்
என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக
அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள்
நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோ மென்றுசொல்லி
வெம்பிடா வண்ணம் வெளியிலுரை யாதிருந்தார்
இப்படியே பூலோகம் எல்லாந் திணுக்கிடவே
அப்படியே மாயவரும் ஆனதெய் வாருடனே
இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம்
ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று
சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப்
பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே
திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப்
பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி
அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே 980

அன்றந்த சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே
அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல்
நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித்
தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும்
மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக்
கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை
வெடுக்காக அந்த விபரிப்பெல் லாம்நடத்தி
வாரிக்கரை யாண்டியென வாய்த்தநா மம்விளங்க
நேரியர்கள் சூழ நெடியோ னங்கேயிருந்தார் 988

திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்க
விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன்
வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன்
நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப்
பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான்
மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல்
தான மழித்துச் சான்றோரின் கட்டழித்து
ஈனகுலச் சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்துப்
பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்துக்
கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்துச்
சாதி வரம்பு தானழித்து மாநீசன்
மூதி முன்னீசன் மும்முடி யுந்தவிர்த்து
நவ்வா முடியெனவே நாடிவன்நா டாகவேதான்
எவ்வோ ரறிய இவன்தேசந் தானாக்கி
ஆளாகமுன் னீசனையும் அவனைநா டாளவைத்துப்
பாழாக நீசன் பழையசட்ட முமாற்றி
நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டுத்
தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது
மானம் வரம்பு மகிமைகெட்டுச் சான்றோர்கள்
ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே 20

தேவர் முறையம்

தேவர்க ளெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி
மூவரொரு மித்தனுக்கு முறையிட்டா ரம்மானை
ஆதி முதற்பொருளே அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள் துயரமெல்லாந் தீருமையா
இத்தனை நாளும் இருந்தோமொரு மானுவமாய்க்
கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது
சாதிக்கட்டை யெல்லாம் தலையழித்து மாநீசன்
மேதினிக ளெல்லாம் மேவினா னையாவே
தான மழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின்
மான மழிந்தாச்சே வரம்பெல்லாங் கெட்டாச்சே
பூப்பியமுங் குலைத்துப் புரசியோ டொப்பமிட்டுக்
காப்பிலிய னேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள்
இத்தனை நாளும் யாங்கள்முறை யிட்டதுபோல்
புத்தி தனில்வைத்தால் பொறுக்கஇனிக் கூடாதே
தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல்
சம்பி முகம்வாடித் தலைகவிழ்ந் திருப்பதென்ன
மக்களு டதுயரம் மனதிரங்கிப் பாராமல்
பக்கமாய் நீரும் பாரா திருப்பதென்ன
சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப் பாராமல்
ஆண்டோரே நீரும் அயர்ந்தே யிருப்பதென்ன 40

இதெல்லா மெங்களைநீர் ஏற்றசான் றோர்பிறப்பாய்
முதலெல்லாஞ் சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால்
பாவியந் தநீசன் படுத்துந் துயரமெல்லாம்
தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும்
பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே
மறுக்க மதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு
உகத்துக் குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம்
அகற்றி யருள்தந்த அச்சுதரும் நீரல்லவோ
மக்களா யெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக
ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால்
இத்தனை பாடும் எங்களுக் கென்றோதான்
புத்திரரா யெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து
நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ
தாங்களுக்கு நெஞ்சம் சற்று மிரங்கலையோ
இப்படியே தேவர் எல்லோரு முறையமிட
அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே

அம்மை உமை இரங்கல்

நல்ல உமைதிருவும் நன்றா யெழுந்தருளி
வல்ல பொருளான வாய்த்தநா ராயணரின்
அடியி லவள்வீழ்ந்து அழுதுகரைந் தேதுரைப்பாள்
முடியுமடி யில்லா முதலே முதற்பொருளே 60

அரிஹரிநா ராயணரே அண்ணரே அச்சுதரே
கரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே
இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால்
அலச்சல்செய் தெங்களையும் அகற்றிவைத்துப் போனீரோ
பாவிக் கலியனுட பழிசாபச் சூட்சியினால்
பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே
கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும்
சலிவாகி மேனி சடல மிகத்திமிர்த்து
இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறா ரீசுரரும்
உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும்
நின்னயமில் லாக்கலியன் நீசன் பிறந்ததினால்
என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும்
வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய்
நானும்பர மேசுரரும் நலநஷ்டமுந் தெரியோம்
பேசிப் பழக்கமிட்டுப் பெருத்தநா ளுண்டுமண்ணே
தோசிக் கலியனுட சூட்சியினால் நாங்கள்படும்
பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன
நாட்டைக் கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன்
அல்லாமல் நம்முடைய அருமைச்சான் றோர்கள்படும்
பொல்லாங்கை யெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும் 80

வரமீறியக் கலியன் மாய்கையி னேதுவினால்
பிரமன் பிறப்புப் பிசகித் தலைமாறி
முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில் லாப்பிறவி
பிண்டப் பிறவி பேருறுப் பில்லாப்பிறவி
தலையுடம் பில்லாத சடலப் பிறவியைப்போல்
நிலைதவறி வேதா நினைவுதடு மாறினனே
சீவன் கொடுக்கும் சிவனுக் கிருநினைவாய்ப்
பாவக் குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும்
படியளக்க நீரும் பண்புற் றிருக்காமல்
குடிகேடு மாச்சே குடிக்கக் கிடையாமல்
இத்தனை யுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே
அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே
எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே
சங்கடங்க ளெல்லாம் தான்சொல்லக் கூடாது
கயிலை சிவனார் காணாம லும்மையுந்தான்
அகிலமதைப் பாராமல் அயர்ந்திருக்கி றாரெனவே
ஆனதா லென்னுடைய அண்ணரே அங்கேகி
மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குச் சொல்வாரும்
என்றுமையா ளிப்படியே இன்பமாய்ச் சொல்லிடவே
அன்று பெருமாள் அவள்முகம்பார்த் தேதுரைப்பார் 100

சிவனாரும் நீயும் தேசமதி லில்லாட்டால்
எவனுக்கு மலைச்சல் இல்லையே ராச்சியத்தில்
உங்களால் யானும் உகத்துக் குகங்கிடந்து
சங்கடங்க ளுற்றுத் தவிக்கத் தலைவிதிதான்
நீங்களில்லை யானால் எனக்கும் அலைச்சலில்லை
ஏனுங்க ளோடே இப்பாடு யான்படத்தான்
அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டு மென்றனக்குக்
கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு
ஏனிந்தப் பாடு யான்படக் காரணந்தான்
மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும்
கைப்பிடித்த நாள்முதலாய்க் கலந்துவிளை யாடறியேன்
மெய்ப்பிடித்த மான மெல்லியரு மங்கிருக்க
இரப்பனைப் போல்லோகம் எல்லாந் திரிந்தலையப்
பரப்பிரம னம்மைப் படைத்ததுமி தற்கோவென
எல்லையில்லாப் பாடு யான்பட்ட துபோதும்
நல்லகுலச் சான்றோரை நான்பெற்று வைத்தேனே
வைத்த தெல்லோரும் மனதறியப் பார்த்திருக்க
பொய்த்தலைவ னீசனையும் பிறவிசெய்ய ஞாயமுண்டோ
நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும்
பாசக் கயிறிட்டுப் பந்தடிக்கச் செய்தாரே 120

தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும்
வெட்டா வெளியாய் விரட்டிப் பிடிக்குமல்லோ
காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ
ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார்
மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே
மோசக் கலியனையும் முடிக்கவகை யாரறிவார்
வாளா யுதத்தாலே மாளானே மாகலியன்
தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான்
முப்பிறவி யாறும் முடித்த வலுமையெல்லாம்
இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை
உகத்துக் குகம்பிறந்து ஓடித்திரிந் தவனென்றே
அகத்துக்கொஞ்சம் வைய்யாமல் அவர்மூப்பாய்ச் செய்தாரே
ஆனதா லின்னமினி அங்குவர வேணுமோகாண்
தானம்வைத்துப் பாராமல் சங்கை யழித்தாரே
எங்கே யானாலும் இறந்திடுவே னானிதற்குச்
சங்கையுள்ள சாணார்க்குத் தங்குமிடம் வேறிலையே
தாய்தந்தை யில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல்
மாயக் கலியனினால் வாடுவரே சான்றோர்கள்
தகப்பனில்லாப் பிள்ளை சாணார்க ளென்றுசொல்லி
அகப்படுத்திச் சான்றோரை அடிப்பானே மாநீசன் 140

தாயுந் தவமிருந்து சடைப்பாளெனைக் காணாமல்
ஆயுங் கலைதெரிந்த ஆயிளையும் வாடுவளே
இப்படியே ஞாயம் இருப்பதா லென்றனக்கு
அப்படியே வேறு வழியல்லவே யானதினால்
எங்கினிப் போவேன் என்றெண்ணுது என்மனது
உங்களுட ஊருக்கு ஒண்ணுதலே போநீயெனக்
கோபத்தால் தங்கையுடன் கூறினா ரித்தனையும்
வேகத்தா லம்மை விழியிட் டழுதனளே
கயிலைக்கு நீர்தான் கால்வைக்கா தேயிருந்தால்
அகிலம தொன்றாய் அழியு மொருநொடியில்
நல்லகுலச் சான்றோர் நாடுங் கலியனினால்
தொல்லைமிகப் பட்டுத் துயருற்று வாடுவரே
நானுமென்றன் ஈசுரரும் நல்ல கயிலையிலே
மானுங் கலைபோல் மறுகி யிருப்போமே
கயிலை முனிதேவர் கட்டழிந்து வாடுவரே
மயிலனைய ஈசர்சொல்லை மறந்து மிருந்தாரே
கன்னிப்பெண் ணார்களென் கற்பனையைத் தான்மறந்து
உன்னுதலாய்ப் பெண்கள் ஒருவர்க்கோர் மூப்பாச்சே
ஐயோ கயிலை அங்கே வரம்பழிந்து
பையரவம் பூணும் பரமன்மௌ னமாச்சே 160

அண்ணரே கோவே அடியாள் தனக்கிரங்கி
எண்ணமில்லாக் கயிலைக்கு எழுந்தருள வேணுமையா
என்று அறம்வளர்த்தாள் இறங்கியண்ணர் கால்தனையும்
சென்று பிடித்துச் செய்யத்தாள் தான்வணங்கி
மனதிரங்கி எம்பெருமாள் மார்போடு தங்கையரைத்
தனதில் பிரியமுற்றுத் தங்கையரோ டேதுரைப்பார்

திருமால் திருக்கயிலை ஏகல்

உன்னோடு பிறந்த ஊழிவிதி யானதினால்
நன்னாடோ டேவாழ நமக்குவிதி யில்லையே
உன்றனக் காகவல்லோ ஊருக்கூரே திரிந்து
சந்தோச மற்று சடைக்க விதியாச்சே
என்று பெருமாள் ஏற்ற பிறப்போடு
இன்று கயிலைக்கு எழுந்தருள வேணுமென்று
தேவர் முனிவரோடு திருக்கனனி மாரோடு
மூவருட நடுவன் மகமலர்ந் தேகூடி
நடக்கவே ணுமெனவே நளினமுற் றெம்பெருமாள்
கடற்கரையில் வந்து காலமே தெனப்பார்த்தார்
இந்தச் சொரூபமதாய் இங்குவிட் டெழுந்தருளிச்
சிந்தர் குடியிருக்கும் சீமையி லேகுமுன்னே
கலிமூழ்கி நாமள் கரையேறப் போறதில்லை
பொலிவாக வேசம் புதுப்பிக்க வேணுமென்று 180

என்ன சொரூபம் எடுப்போம்நா மென்றுசொல்லி
அன்னப் பெருமாள் ஆலோ சனையாகி
மேலெல்லாம் வெண்ணீற்றை மிகஅணிந் தெம்பெருமாள்
பாலொக்கும் நெஞ்சம் பரம னொருநினைவாய்
மாமோக ஆசை மயக்க வெறியறுத்துத்
தாமோ தரனார் சடைக்கோல மேபுனைந்து
காலில் சிவநினைவைப் கழராமல் தானிறைத்து
மார்பிலைந்து பூமணியை வகிர்ந்தார வேடமிட்டுக்
கண்ணில் மனோன்மணியைக் கண்ணாடி யாய்ப்பதித்து
எண்ணரிய தங்கை இன்பமுட னேவளர்த்த
முப்பத்தி ரண்டறத்தை உடலெல்லா மேபொதிந்து
செப்பமுடன் கந்தை செய்யவெண் கலையணிந்து
தண்டரள மானத் தடியொன்று கைப்பிடித்து
அண்டர்களும் போற்றி அரகரா என்றுவர
தேவர்களுங் கூடிச் சிவசிவா சிவனேயென்று
தாவமுள்ள தேவரெல்லாம் தாரமி டேத்திவர
அம்மை உமையாளும் அவளுஞ் சடைவிரித்துச்
செம்மையுள்ள மாதும் சிவசிவா என்றேத்தி
எல்லோ ருடனே எம்பெருமாள் தானடந்து
வல்லோர் புகழும் வாழ்கயிலை வந்தனராம் 200

கயிலை தனில்வரவே காரிருளுந் தான்மறைய
மயிலையொத்த ஈசர் மாயவரைக் கண்டாவிச்
சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல்
வந்தந்த ஈசுரரும் மார்போ டுறவணைத்து
இத்தனை நாளும் யானும்மைக் காணாமல்
புத்திரனுந் தாயைப் போகவிட்டாற் போலிருந்தேன்
மாரி காணாத வாய்த்த பயிர்போலும்
ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன்
இனம்பிரிந்த மான்போல் இருந்தே னுமைத்தேடித்
துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன்
என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும்
சென்றாவிக் கொண்டு சிணுங்கி யழுதுசொல்வார்
இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே
துணையு மெனைமறந்து தூரநீர் போனதென்ன
என்னைவிட்டு நீரும் எழுந்தருளு மன்றுமுதல்
வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன்
துணையிழந்த அன்றிலைப்போல் தினமு முமைத்தேடிக்
கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே
உயிர்த்தோ ழமைபோல் உறவுகொண்ட நாரணரே
மெய்த்தோ ழமையை விட்டுப் பிரிந்தமுதல் 220

பிரிந்து மலைத்தேன் பச்சை நிறமாலே
சரிந்துபள்ளி கொண்டு சதாவருட மாச்சுதல்லலோ
இத்தனைநாளும் என்னைமிகப் பாராமல்
மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன
கயிலைக்கு மென்றனக்கும் கட்டான மந்திரிதான்
அகில மீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான்
நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே
தானீ தமான சர்வபர நாரணரே
இந்த விதமாய் இகபர விதத்தோடும்
உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ
அப்படியே நீரும் ஆதிநா ராயணராய்
முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே
கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும்
ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும்
கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர்
மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும்
வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும்
நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும்
இப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக்
கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல் 240

சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம்
எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும்
வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச்
செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு
மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது
எல்லா முமது இச்சையது போல்நடத்தும்
சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று
மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப்
பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை
அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார்
எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை
நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய
ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள்
முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால்
பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை
உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப்
பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண்
யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது
தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி
இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு 260

மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை
சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில்
சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு
எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு
வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே
அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும்
மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில்
இனிதிருக்கும் போது என்னை நினையாமல்
மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார்
ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய்
வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே
முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல்
வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ
இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி
குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி
வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால்
கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ
மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி
வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி
தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும் 280

ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே
முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர்
சிறைப்பிடித்தப் பாவிகளைச் செயித்ததுவே றாருமுண்டோ
நாலாம் யுகத்தில் நன்றிகெட்டச் சூரபற்பன்
ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே
நாட்ட முடனே நாடும் படையோடு
கோட்டை யதிட்டுக் கொடியமா பாவியனாய்க்
கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்துத்
தேட்டமுடன் கயிலை சீமையது வுங்கொடுத்து
இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி
உருக்கமுடன் நானிருந்த உவரியி லேகிவந்தீர்
தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால்
மூவர்முத லும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால்
என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லிச்
சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே
விட்டவுட னவனோடே வெகுநாளா யுத்தமிட்டுப்
பட்டபா டெல்லாம் பகர எளிதாமோ
உயுத்தமிட் டவனை ஒக்கத் தரமறுத்துச்
செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே
இரணிய சூரனென்று எனக்கெதிரி யாய்ப்பிறந்து 300

தரணியி லவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான்
பின்னு மவன்றனக்குப் பிள்ளையாய் நான்பிறந்து
கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம்
பத்துத் தலையோடு பாவியவன் பிறந்து
உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து
அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்துக்
குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப்
பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே
தேவியும் நானும் தேசமதி லேபிறந்து
அவனை யழித்து அந்தயுக முங்கருக்கிச்
சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு
சதியாந்துரி யோதனனாய்த் தான்திரும்ப வெபிறந்து
மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல்
அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி
வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால்
கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே
என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம்
கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து
வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு
அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு 320

சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை
இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு
எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு
கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால்
சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ
மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும்
பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென
வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே
பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான்
மற்றப் பிறவி யாக வகுத்தாலும்
இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு
அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே
மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம்
தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன்
வீண்டிடறு தீர்ந்துமக்கள் விளங்குவது எக்காலம்
ஆறு பிறவி அழித்ததுவு மென்றனக்கு
நீறுபோ லெண்ணுதுகாண் நிற்கலியைப் பார்க்கையிலே
என்ன விதத்தால் இவனை யழிப்போமென்று
வன்னச் சிவனாரே மனதுவேறே ண்ணுதுகாண்
நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு 340

வீடாச்சு குண்டம் மேதினிக ளங்காச்சு
தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான்
மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண்
பலபேர்க ளாட்டும் பாம்புபோ லென்னையுந்தான்
அலைவிதமா யென்னை அழைத்ததென்ன சொல்லுமென்றார்
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது நானும் இயம்புகிறேன் கேளுமென்று
முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்குப்
பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே
அன்றுசா பம்பகர்ந்த அதுகேட்டுக் கொண்டருளும்
குறோணி யொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து
சுறோணித மாயவரே தொல்புவியெல் லாமுழுங்கி
என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரை யும்விழுங்க
நின்னோடு மாயவரே நீயொருவன் தப்பிமிக
என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில்
தென்னவனே நீயும் செய்தத் தவமதினால்
எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன்
குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி
கேட்டாயே சூரனுடல் கீறித்துண் டாறாக்கித்
தாட்டாண்மை யாகத் தரணிதனில் விட்டெறிய 360

வரந்தாரு மென்று வாகாகக் கேட்டவுடன்
தரந்தரமே துண்டம் தரணிக்கெல் லாம்பிறந்து
மாற்றா னாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும்
சீற்றத் துடனே செடமெடுக்கு மென்றுசொல்லித்
தந்த வரத்தின் தன்மையா லிந்தமுறை
எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப் போறீர்காண்
என்றந் தஈசர் இப்படியே சொன்னவுடன்
அன்று மகாமால் ஆகங் களிகூர்ந்து
ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்க ளானாலும்
மானாபர ஞாய வரம்பழித்துப் போட்டீரே
இதற்குமுன் னேதாலும் என்னையறி யாதவண்ணம்
ஒதுக்கிலிருந் தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ
மும்முறைபோ லென்னை உவந்துக் கெணியாமல்
அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே
என்னைக் கெணியாமல் இக்கலியைச் செய்ததினால்
நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது
அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது
விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது
நம்மாலே யொன்றும் நடவாது ஈசுரரே
சும்மாவென் னோடிருந்து சோலிபண்ண வேண்டாங்காண் 380

உகத்துக் குகங்கள் ஓடித்திரிந் தலைந்து
மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா
தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது
ஏங்கிமிக வாடுதப்பா என்திருவைக் காணாமல்
பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில்
ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ் சோருதையா
அந்தமுழுப் பாவிகளில் அதிகமுழுப் பாவியிவன்
சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்துநின் றேவல்செய்தால்
கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்ச மோயிவன்தான்
முடியுமோ பாவி யுத்தமிடச் சென்றதுண்டால்
தன்ம மறியாத சண்டித்தடி மூடர்கையில்
நம்மைப் பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண்
பட்ட அடிவூறப் படுத்திருக்கப் போறேனான்
ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண்
என்றாதி நாரா யணர்தானு மிப்படியே
அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச்
சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன்
புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே
இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால்
எப்படித்தா னானும் ஏகம தாளுவது 400

சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ
கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே
மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே
ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே
கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே
செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம்
நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால்
ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது
மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம்
கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது
தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு
மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம்
பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே
மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை
எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச்
சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று
ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார்
வீசுபுக ழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும்
என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந் தாரெனவே
சொன்னவரை யெல்லாம் சுறுக்காகத் தானழையும் 420

என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன்
அன்றந்த ஈசுரனார் அழைத்தா ரவர்களையும்
உடனேதான் தேவர்முனி ஒக்கப் பயமடைந்து
தடதடென ஓடிவந்து தாழ்ந்துநமஸ் காரமிட்டு
அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்துச்
செப்புகிறா ரையா திருக்கண் பொறிபறக்கக்
கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து
விண்க ளதிர வெடுவெடெனக் கோபமுற்றுத்
தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற
மூவர் திணுக்கிடவே உரைக்கிறா ரெம்பெருமாள்
மண்திண் ணெனவே மலைகள் பொடிபடவே
திண்திண் ணெனவே தேவர் மிகப்பதறச்
சிவனுங் கிடுகிடெனச் சிவனுமை யும்பதற
நமனும் பதற நாரா யணருரைப்பார்
தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே
மூவரே நானும் ஒளித்ததெங்கே சொல்லுமென்றார்
ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கே யில்லையென்று
கோளுரைத்த ரீசர் குருமுன்னே நீங்களெல்லாம்
சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச் சொன்னதிட்டச்
சூத்திரத்தை யெல்லாம் சொல்லுமென்றா ரெம்பெருமாள் 440

சொல்லநா வில்லாமல் சோர்ந்துமிகத் தேவரெல்லாம்
பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே
கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல்
விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கிநின்றா ரன்போரே
நின்ற நிலையறிந்து நெடியபர மேசுரரும்
அன்றெந் தனோடே அறம்பாடிச் சொன்னதெல்லாம்
இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச் சொல்லாமல்
நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன
பேச்சுப்பே சுங்கிளிக்குப் பின்பூனை நாட்டமுற்றால்
சீச்சுக்கீச் சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன்
அன்றுநீர் சொன்னமொழி அயர்த்துமிகப் போனதென்ன
இன்றுநான் கண்டிலனே இதற்குமுன் னுள்ளதிறம்
இப்படியே ஈசர் எடுத்துரைக்கத் தேவரெல்லாம்
எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார்
எல்லா மறிந்து எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
பொல்லாதார்க் கெல்லாம் பிறப்பொன் றிசைந்திருக்கு
சொல்லுகிறேன் நானுமொன்று சொல்லுவதைக் கேட்பீரோ
நல்லதுதா னென்று நாட்டமுற் றெல்லோரும்
அப்போது எம்பெருமாள் ஆதிசிவ மோடுரைப்பார்
இப்போது கேட்பீரோ யான்சொல்லும் நியாயமது 460

சிவன் திருமால் ஐக்கியம்

என்றுதிரு மாலுரைக்க எடுத்துரைப்பா ரீசுரரும்
மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே
வாரு மெனஅழைத்து மாலோன் தனையிருத்திச்
சீருடனே வேதாவும் சிவனும் உமையாளும்
எல்லோருங் கூடி இருந்தந்த மாயவரின்
நல்லா யருகிருத்தி நவிலுவார் சத்தியமாய்
இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்துக்
கதுக்காக வும்முடைய கருத்தின் படியாலே
நடக்கும்படிச் சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோங்காண்
அடக்குடக் கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண்
இன்றுமுத லும்முடைய இச்சைபோ லேநடத்தி
என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து
சட்டமெல் லாமுமக்குத் தந்தோ மினிநீர்தான்
இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண்
உம்மை நினையாமல் உக்கலியைச் செய்ததினால்
நம்மை வரைநீர்தான் நடத்தும் படிநடத்தும்
என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும்
அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும்
சத்திய மாகத் தானுரைத்தார் நாரணர்க்கு
மத்திய நாதன் மனமகிழ்ந் தேதுசொல்வார் 480

நல்லதுதா னென்று நாட்டமுற் றெம்பெருமாள்
வல்ல பரமே சுரரோ டேவகிர்வார்
கன்மம்போ லொத்தக் கலிப்பிறப் பானதினால்
நம்மள் முதல்மாறிப் பிறக்கநா ளாகுதுகாண்
ஆனதா லீசுரரே அருளுகிறேன் நீர்கேளும்
ஈனமுள்ள பாவி இயன்றதுரி யோதனனைக்
கொன்றே னவனைக் குருநாடை வர்க்கீந்து
முன்னே மறையோன் மொழிந்தசா பத்தாலே
தேவர்முதல் வானோர் தேவமுனி தான்வரையும்
மூவ ருறையும் உற்றதெய்வ லோகமேழும்
மேலோர்க ளெல்லாம் மேதினியி லென்றனக்குப்
பூலோகந் தன்னில் பிள்ளையென வேபிறக்க
வேணுமென்று மாமுனிவன் விட்டசா பத்தாலே
தாணுவே நீரறியத் தாம்பிறந்தார் சாணாராய்
ஏழுலோ கமதிலும் ஏற்றமுள்ள வித்தெடுத்துக்
கீழுலகில் பெற்றேன் கீர்த்தியுள்ள சாணாராய்ப்
பெற்றுவைத்து ஸ்ரீரங்கப் பூமியிலே போயிருந்தேன்
மற்றுஞ்சில நாட்கழித்து வாழுந் தியதிதனில்
அனந்த புரம்நோக்கி யானேகும் வேளையிலே
புனந்தனிலே நின்று புலம்பலுற்றார் தேவர்களும் 500

தெய்வலோ கத்திலுள்ள தேவதே வாதிகளும்
வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும்
சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும்
தவமான வேதாவின் தன்னுகத்தில் வாழ்பவரும்
வடகயி லாசமதில் வந்திருந்தார் வாட்டமதாய்
நடக்கும் வழியில் நானவரைக் கண்டேதான்
தாது கரமணிந்த தானவரே தர்மிகளே
ஏதுகா ணீங்கள் இங்குவரக் காரணமேன்
என்றவரோ டேகேட்டேன் ஈசுரரே கேட்டருளும்
அன்றவர்க ளென்னோடே அருளினதை நீர்கேளும்
கலியன் பிறந்ததினால் கட்டழிந்து மானுபங்கள்
சலிவாகி எங்களுட தானதவங் குன்றினதால்
இனியிருந்தா லென்னபலன் என்றுமிக எண்ணமுற்றுக்
கனிந்து வுமைத்தேடிக் காணவந்தோ மென்றுரைத்தார்
அப்போது வுங்களுக்கு ஆகவேண் டியவளம்
இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன்
சொல்லுகிறா ரந்தத் தேவர்கள்தா மீசுரரே
நல்லதுதா னிந்த நாட்டில்கலி வந்ததினால்
கலிக்குமுன் னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும்
அலிக்கிய மானதினால் அக்கலிமா ளும்போது 520

சிவசத்தி தான்முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும்
தவமுனிவ ராகிடினும் தரணி புற்பூண்டுவரை
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம்
மேனி யழுக்கறுத்து மேன்மூ டிருளறுத்து
யோனிப் பிறப்பும் உற்றலிங் கப்பிறப்பும்
அவரவர்க் குள்ள அதிகப் பிறப்போடும்
எவரெவர்க்கும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ
ஆகும் பிறப்பும் ஆகுவது மிந்நாளில்
சாகும் பிறப்புத் தவறுவது மிந்நாளில்
அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால்
எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே
ஆனதா லெங்களுட அக்கமதி லிப்போது
மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றா ரீசுரரே
கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந் தேன்முன்னமே
இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகி லுள்ளோரைப்
பிறவிசெய்ய ஞாயமுண்டு பிள்ளைமொழி சொன்னதினால்
திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான் 540

நீர்நினைத்த துபோலே நிச்சயித்துக் கொள்ளுமென்றார்
பாரனைத்துங் காக்கும் பரமே சுரருரைத்தார்
அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும்
முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்

தேவலோகத்தார் மனுப்பிறப்பு

தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும்
பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல்
மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு
சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும்
உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு
அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று
சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி
நல்லதுகாண் நாரணரே நாங்கள்பிழைத் தோமெனவே
பிறக்கவே போவோம் பிறந்தா லடியார்க்கு
இறக்கவிதி யாகுமல்லோ இழிகலிய னேதுவினால்
இறந்தால் பின்னுமந்த இனத்திலடி யார்பிறக்க
வரந்தாரு மென்று வணங்கிநின்றா ரையாவை
அப்போது அய்யா அரிநமோ நாரணரும்
செப்பரிய நல்லகுலத் தேவர்களுக் கேதுரைப்பார்
மக்களே நீங்கள் வையகத்தி லேபிறந்தால்
வக்கலிய னேதுவினால் மாயமுங்க ளைச்சூழ்ந்து 560

என்பேரு மீசர் ஏற்றஉமை யாள்பேரும்
தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான்
ஆனதால் சாவுவரும் ஆனாலு முங்களுயிர்
மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும்
இப்படியே வுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும்
எப்படியு முங்களுயிர் இதில்விட் டகலாதென்றார்
நல்லதுகா ணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம்
வல்ல வகையான வாய்த்தசா ணாரினத்தில்
தேவ ருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம்
மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம்

சம்பூர்ணத்தேவன் - பரதேவதை தவசு

போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித்
தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா 580

என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய்
உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு
பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ
அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ
இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா
ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ
பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா

ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா
பூனை யொடுவந்து புல்குமோ - பூனை
நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா
ஈயோடு சேர்மோ இசல்

ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன
வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ
ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண் 600

எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும் 620
நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார்
அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும்

எமலோகத்தார் மனுப்பிறப்பு

ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத்
தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே
ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார்
உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி
எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால்
ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே
மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர்
இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க
வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில்
போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து
மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில்
இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து
எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று
உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று
எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார்

சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு

சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து
மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே 640
நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து
என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால்
இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய்
வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால்
காலக் கலிதான் கட்டழித் தென்மகவு
மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால்
நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில்
மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய்
வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம்
நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ
ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம்
போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு

பிரமலோகத்தார் மனுப்பிறப்பு

பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை
வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார்
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே
ஏதுங்கள் ஞாயம் என்னோ டுரையுமென்றார்
அப்போது நல்ல அந்தரிஷி யேதுரைப்பார்
இப்போது அய்யாவே எங்களைப்பூ லோகமதில்
படைக்கவே ணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல்
நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது 660

முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை
வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய்
அல்லாம லெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே
பொல்லாத குற்றம் பிரமனுக்குச் செய்ததினால்
அன்பத்தினா லொன்றிரிஷி அவனிதனில் போகவென்று
இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம்
ஆனதா லவர்கள் அவனிதனி லேதிரிய
ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால்
இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில்
கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார்
நல்லதுதா னென்று நாரா யணருரைப்பார்
வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே
அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று
மதுக்குகந்த மன்னன் வழுத்துவா ரன்போரே
சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப் பூமிதனில்
மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே
என்ன விதமாய் இருப்பாரென் றேயினமாய்
துன்னயமாய் நீங்கள் துணிந்துநன்றாய்க் கேட்டிங்கோ
மான்தோ லிலேயிருப்பான் வானமதைத் தான்பார்த்துத்
தீன்சோ றருந்தாமல் செலங்குடித்து நாடோறும் 680

கற்பமுண்டோ மென்று கலியில்மிகப் பட்டுழன்று
அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து
பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும்
வரம்வைத் தவனை வதைத்துப்பின் னுன்னினத்தில்
படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே
அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும்
ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும்
நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு
ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும்
மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு
நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு
கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து
வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள்
ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும்
கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள்
மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச்
சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள்
மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும்
இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள்
உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து 700

அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து
இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு
பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார்
கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர்
கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும்
உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர்
புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து
தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர்
புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர்
தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர்
பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால்
காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார்
உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து
நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள்
இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய்
அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார்
சோழக் குருநாடு தேசமது நன்னாடு
ஆளவை குண்டர் அவர்வளரும் நன்னாடு
இந்நாட்டில் வாழும் இராச ருடவளமை
சொன்னால் தொலையாது சொல்ல எளிதல்லவே 720

இப்புவியில் வாழும் என்றன்வை குண்டரிடம்
எப்புவியில் வாழும் இருஷிகன் னாசியெல்லாம்
வரம்வைக்கச் சொல்லி வதைக்கவந்த வைகுண்டர்காண்
பரம்பெரிய வைகுண்டப் பதியாள வந்தவர்காண்
சன்னாசி யெல்லாம் தலைவீதம் வாழுகின்ற
மின்னான சீமை விரிக்கக்கேள் நீங்களெல்லாம்
பாண்டிய னான பரிகொங்கை நன்னாட்டில்
ஆண்டிருப்பான் சன்னாசி அவனொருவன் கேட்டிருநீ
வருஷ மொருநேரம் மாறிப் பிறந்தேனென்று
புருஷனென வந்தெடுத்தால் பிள்ளையுண் டென்றுசொல்லி
இருப்பான் சிலநாள் இவனொரு சன்னாசி
சிங்கள நன்னாட்டில் சீகண்டன் ராச்சியத்தில்
புங்கம்பா லுண்டு பூவையரைப் பாரோமென்று
ஆடை யுடுக்காமல் அவனிருப் பானொருவன்
கோரக்க நாடு குருக்கேத்திரன் ராச்சியத்தில்
சூரக்கோல் கைப்பிடித்துச் சூலா யுதமேந்தி
தன்மதத்தால் பேசித் தானிருப்பா னேசிலநாள்
கன்மத்தால் சாவான் கடியமூன் றாம்பேர்தான்
இப்படியே யைம்பத் தாறூ ரிவைகளுக்கும்
அப்படியே தானிருக்கும் ஆனசன் னாசிகட்கு 740

ஒண்ணொண் ணடையாளம் உரைக்கிறேன் சீக்கிரமாய்
துண்ணெனவே நீங்கள் துணிந்துமிகக் கேளுமென்று
நாலாஞ் சன்னாசி நயன மிமையாதிருப்பான்
காலைக் கைகொண்டு கட்டிறுக்கி யேயிருப்பான்
அஞ்சாஞ் சன்னாசி அன்னங் குடியாமல்
பிஞ்சிரு மிச்சியிலை பிசைந்துதின் றேயிருப்பான்
ஆறாஞ் சன்னாசி ஆனகஞ் சாகுடித்து
நீறாக்கித் தேகமதை நிஷ்டைபோல் தானிருப்பான்
ஏழாம் சன்னாசி இடுப்பிலொரு சீலைகட்டிப்
பாழாகப் பட்சி பறவைதின்றே யிருப்பான்
எட்டாஞ் சன்னாசி இருந்துமிகக் கண்மூடி
கட்டாய்ச் சுவாசமதைக் கவர்ந்துகவர்ந் தேயிருப்பான்
ஒன்பதாஞ் சன்னாசி உமிழ்நீ ரிறக்காமல்
இன்ப விறுவிறுத்து ஈரவம்போல் கண்வெளுத்துத்
தூங்கினாற் போலே சூழச்சூழ விழித்துப்
பாங்குகள் தேடிப் பதிந்திருப்பான் கண்டீரே
பத்தாஞ் சன்னாசி பதிவாக நாள்தோறும்
சிற்றா மணக்கிலையில் துயிலுவான் கண்டீரே
பதினொராஞ் சன்னாசி பவளமணிக் கோர்வையிட்டுத்
துதியா யொருமூலம் சொல்லித்தினம் சேவித்து 760

உரிய உளுந்தும் ஓயாமல் கஞ்சாவும்
சதமென்று நம்பி தானிருப்பான் கண்டீரே
பன்னிரண்டாஞ் சன்னாசி பாரக்கல் கோர்வையிட்டு
உந்திக்(கு) இலுப்பையிலை உழக்குச்சா றுகுடித்து
இருப்பான் பதிமூன்றான் இவனினத்தைக் கேட்டிருநீ
பருப்பா னவலும் பழமுந் தினமருந்தி
கோவை யிலையும் கொடுப்பையிலை யும்புசித்துச்
சேவைபண்ணி நித்தம் செய்திருப்பான் கண்டாயே
பதினாலாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு
துதியா யொருமூலம் சொல்லித் தினஞ்சேவித்துக்
கையிறை கொண்டேதான் கட்டிக்கொண் டேயிருப்பான்
பதினைந்தாஞ் சன்னாசி பார்க்கெந்த மாலையிட்டு
மதியகத்தே வுண்டு மலர்ந்துதுயின் றேகிடப்பான்
பதினாறாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு
ஆடை யுடுக்க அறிவுசற்று மில்லாமல்
கோடை குடித்துக் குலைவான் பதினாறான்
கள்ளிதனைத் தின்று காய்க ளிலையருந்தி
கொள்ளித் தழல்காய்வான் கொடிய பதினேழான்
நல்லத்திக் காயருந்தி நாமமணி யும்பூண்டு
கொல்லத்தி போலே குலைந்துகுலைந் தேதிரிவான் 780

இவன்பதி னெட்டான் என்றே யினமறிநீ
எவனு மறிவான் ஈரெட்டு மூன்றானை
மான்தோலின் மேலிருப்பான் மற்றிருபான் மீசையுள்ளான்
தான்தெரியு மற்றிருபத் தொன்றா னினங்கேளு
நாகத்தின் முள்ளை நல்லதலை மேலணிந்து
கூகத்தைச் சுற்றிக் கும்பிட்டுத் தான்திரிவான்
இருபத்தி ரண்டான் இனங்கேளு நன்றான
மதுவைத்து நித்தம் வணங்குவான் மந்திரத்தை
இருபத்தி மூன்றான் இருப்பான் மயிர்வளர்த்துச்
சருவைத்துப் பால்பழத்தில் தந்திரத்தை யோதிடுவான்
இருபத்தி னாலான் எங்கு மிகத்திரிந்து
உருவேற்றி நித்தம் உடல்வாட லாயிருப்பான்
இருபத்தியைந் தாமிருஷி எருக்கலம் பாலருந்தி
பருவமாய் ஓவியஞ்செய் ததிலே படுத்திருப்பான்
கள்ளுக் குடித்துக் கறியுப்புக் கூட்டாமல்
புள்ளித்தோல் மேலிருப்பான் புகழிருபத் தாறானும்
நீரைத் தியானமிட்டு நித்திரைக்குத் தானோதி
பாதை வழியேகான் பத்துரண் டேழானும்
கோண முடிமுடித்து குறுத்தடியுங் கைப்பிடித்து
நாணமில்லா தேதிரிவான் நல்லிருபத் தெட்டானும் 800

சூலம் பிடித்துச் சுழியெழுத்தை மேலூன்றி
கோலமிட் டேதிரிவான் கூறிருபத் தொன்பானும்
முப்பதாஞ் சன்னாசி முச்சந்தி தான்பார்த்து
அப்புச் சிரங்குபற்றி அவன்கிடப்பான் சந்தியிலே
ஓர்முப்பத் தொன்றான் ஊமையென வேதிரிந்து
கூர்மையுள்ள காது கொஞ்சமுங்கேளாத் திரிவான்
முப்பத்தி ரண்டான் உயர்ந்ததிடில் தான்பார்த்து
சர்ப்பத்தின் நஞ்சு தானுண்டோ மென்றிருப்பான்
நன்றா யறிந்திடுநீ நல்லமுப்பான் மூன்றானையும்
கண்டா லறிந்திடலாம் கண்ணில் வெளுப்புமுண்டு
தொண்டையில் சடம்புகட்டித் தொல்புவியி லேதிரிவான்
மண்டை வகுப்புமுண்டு வாய்த்தமுப்பத் தினாலான்
முப்பத் தைந்தானும் முயலகன்போ லுண்டாகி
எய்ப்பிளைப்பார் போலே இவன்திரிவான் கண்டாயே
செப்பமுள்ள முப்பத்(து) ஆறான் செய்தியைக்கேள்
புஸ்பமீதிற் படுத்து பூவையர்கள் தாலாட்ட
அற்பமுட னாடை அணியாமல் தானிருப்பான்
முப்பத்தி யேழாஞ் சன்னாசி யானவனும்
அகத்தி யிலையருந்தி ஆனைத்தோல் மேலிருந்து
மகத்துவமாய்ப் பேசி மாள்வான் முப்பத்தேழான் 820

கொல்ல மிளகு குறுணியொரு நாளருந்தி
பல்லைமினுக் காதிருப்பான் பார்முப்பத் தெட்டானும்
சோறு குழையவைத்துச் செவ்வலரிப் பூவிலிட்டு
ஆறுமுன் பூவோடு அருந்துவான் முப்பத்தொன்பான்
நாக்கிலோ ராணிதனை நல்லவிந்தை யாய்க்கொருத்து
மூக்கிலே கட்டி முனங்குவான் நாற்பதானும்
சிறுபயறை மாவாக்கித் தேங்கா யதனிலிட்டு
முறுக்கா யதையருந்தி முழுங்குவான் நாற்பத்தொன்றான்
அறைக்கீரை வித்தை அருந்தித் தினந்தோறும்
சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான்
நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை
தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே
விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும்
நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண்
நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி
நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு
பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான்
பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து
நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும்
எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து 840

நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும்
மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே
இருளான போது இந்தநினை வாயிருப்பான்
காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி
நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும்
புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து
நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும்
அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான்
மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான்
அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும்
புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான்
நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து
ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான்
சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி
அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும்
ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக்
கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு
விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான்
வழிவிட்டு விலகி வழிநடப்பா னைம்பத்தஞ்சான்
இப்படியே யைம்பத்(து) அஞ்சு இருஷிகளும் 860

அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறுசெய்து
இருப்பா ரவர்கள் இராச்சியத்துக் கொன்றாக
பருப்பா ரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று
இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில்
ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க் கொண்டுவந்து
வைக்கச்செய் வேன்வரத்தை மனுவறி யச்சிலரைச்
செயிப்பேன் பலபேரைச் செகமெல்லா மறிய
வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி
நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தி யேதருவேன்
ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
ஈனமில்லா துங்கள் இனத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால்
பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில்
நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன்
என்று பிரம இராச்சியத் தோர்களையும்
அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண்

வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு

அந்தப் பிறவி அவர்செய் தனுப்பிவைத்துச்
சொந்தப்பிறவி சிவவைகுண் டத்தோரை
வாருங்கோவென்று வரவழைத் தெம்பெருமாள் 880
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை
அப்போது தர்மியெல்லாம் அரியோ னடிவணங்கி
எப்போது மெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே
ஆண்டவை குண்டம் ஆண்டிருந்தோ மித்தனைநாள்
தாண்டவரே யினியுமது தயவி னருளாலே
என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில்
வன்னத் திருமாலே வகுத்தா லதுமனதாம்
என்றுதர்மி யெல்லாம் இசைய ஆதிநாரணரும்
நன்றுபிள்ளா யுங்களுட நல்வளமை சொல்லுகிறோம்
இல்லா தெளியோர்க்கு எனைநினைந்து தர்மமிட்டுப்
பல்லுயிர்க் குன்னயிராய்ப் பார்த்தீ ரொருப்போலே
நீத நிலையை நிறுத்தி யெனைநினைந்து
சீதமாய்ப் பூமி செலுத்தியர சாண்டிருந்து
வந்தீர்கள் கூட்டோடு வைகுண்ட மானதிலே
சேர்ந்தீர்க ளாகிடினும் செய்தநன்றி தான்பார்த்து
உங்களுக்கின் னாள்வரையும் உதவிதர வில்லையல்லோ
தங்களுக்கு நன்மை தரவேணு மானாக்கால்
இன்னமொரு பிறவி என்மகவி லேபிறவும்
வன்னப் பிறவியென் மகவழியில் தான்பிறந்தால்
ஏழு யுகக்கணக்கும் யான்கேட் டுங்களுக்கு 900

மாளுவ தில்லாமல் மறுபிறப் புமறுத்து
நம்முடைய சொத்தும் நாடியுங் களுக்கீந்து
மும்மடங்காய்த் தர்மம் ஓங்கிவளர்ந் தேயிருப்பீர்
என்றுதர்மி தங்களுக்கு எம்பெருமா ளீதுரைக்க
அன்றந்தத் தர்மிகளில் ஐபேர்க ளேதுரைப்பார்
ஆயரே எங்களுட ஆதிநா ராயணரே
மாயரே எங்களைநீர் மறந்தெங்கே போனீர்காண்
காணாம லும்மையெங்கள் கண்கள் மிகத்தவித்து
வாணா ளயர்ந்து மறுகிநொந்து வாடினோமே
என்றுதர்ம பாண்டவர்கள் இப்படியே சொல்லிடவே
நன்றுநன் றென்று நாரா யணர்மகிழ்ந்து
முன்னமே நீங்கள் உகத்துக் குகங்கூட
என்னைவிட் டகலாது இருந்தீர்க ளென்னுயிர்போல்
ஆனதா லிப்பிறவி அய்யாநா ராயணராய்
மானமாய்த் தர்மம் வளர்ந்தோங்க எந்நாளும்
நிச்சித்து ஒன்றாய் நிலைநிறுத்தித் தற்சொரூபம்
மெச்சித்து நானினித்தான் மேல்பிறக்கப் போவதினால்
என்மகவாய் நீங்கள் ஏழி லொருவனுமாய்க்
கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ
என்றேதான் தர்மிகட்கு எம்பெருமா ளீதுரைக்க 920

அன்றேதான் தர்மி எல்லோரு மேதுரைப்பார்
தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி
மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம்
மானுவங்க ளில்லா மாளுங் கலியுகத்தில்
பேய்நீச வையகத்தில் பிறக்கப்போ வென்றீரே
நாங்கள் முன்செய்த ஞாயநடுப் போய்விடுமே
ஏங்கக் கலியனுட இருளினா லையாவே
நாயநடுக் கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து
தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே
ஆனதால் நீரும் அன்றுநடுக் கேட்கையிலே
மானமில்லை யானால் வழக்கென்ன சொல்லிடுவோம்
என்றுரைக்கத் தர்மி ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள்
என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி
வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம்
ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும் 940

தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை
நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும்
தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி
உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு
மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி
நானுங்க ளாலே நல்ல தவசிருந்து
மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில்
தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில்
பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து
தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும்
நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது
என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறவி அமையுமென்றா ரப்படியே
நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில்
மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார் 955




Share



Was this helpful?