Go Back

22/03/21

பூவார் கொன்றை - பாடல் 11


பூவார் கொன்றை - பாடல் 11


காரார் வயல் சூழ் காழிக்கோன் தனைச்

சீரார் ஞான சம்பந்தன் சொன்ன

பாரார் புகழப் பரவ வல்லவர்

ஏரார் வானத்து இனிதா இருப்பரே

விளக்கம்:

கார்=நீர் காரார்=நீர்வளம் மிகுந்த; ஏரார்=அழகு பொருந்திய; திருஞான சம்பந்தரின் பதிகங்களை பாடும் அடியார்களை உலகத்தவர் புகழ்வார் என்று இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

நீர்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீர்காழி நகரில் உறையும் இறைவனை, சிறப்பு வாய்ந்த திருஞான சம்பந்தர் சொன்ன பாடல்கள் கொண்டு, உலகத்தவர் புகழும் வண்ணம் பாடி இறைவனை புகழ வல்லவர்கள், அழகிய முக்தி உலகம் சென்றடைந்து நிலையான இன்பத்துடன் இருப்பார்கள்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#poovar konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

பூவார் கொன்றை - பாடல் 11


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: