Go Back

22/03/21

பூவார் கொன்றை - பாடல் 10


பூவார் கொன்றை - பாடல் 10


பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்

கரக்கும் உரையை விட்டார் காழியார்

இருக்கின் மலிந்த இறைவர் அவர் போலாம்

அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே

விளக்கம்:

பெருக்க=மிகவும் அதிகமாக; பிதற்றும்=சாரமற்ற சொற்களைப் பேசும்; கரக்கும்=உண்மையை மறைத்து பேசும்; அருப்பின் முலையாள்=அரும்பு போன்று மென்மை வாய்ந்த மார்பகங்கள்;’ இருக்கின் மலிந்த=இருக்கு முதலான நான்கு வேதங்களில் நிறைந்துள்ள;

பொழிப்புரை:

மிகவும் அதிகமாக சாரமற்ற சொற்களைப் பேசும் சமணர்களின் சொற்களையும், உண்மையை மறைத்துப் பேசும் புத்தரின் சொற்களையும், சீர்காழியில் வீற்றிருக்கும் பெருமான் ஒரு பொருட்டாக கருதாமல் நீக்குகின்றார்; இருக்கு முதலாகிய நான்கு வேதங்களில் நிறைந்துள்ள பெருமான், அரும்பு போன்று மென்மையான மார்பகங்களை கொண்டுள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்

Tag :

#thirugnanasambandhar thevaram
#poovar konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram


பூவார் கொன்றை - பாடல் 10


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: